Monday, February 8, 2010

தலைமை ஆசிரியர் “செக்ஸ்” தொல்லை;ஆசிரியை பரபரப்பு புகார்

அறைக்கு அழைத்து தலைமை ஆசிரியர் "செக்ஸ்" தொல்லை; கலெக்டர் அலுவலகத்தில் ஆசிரியை பரபரப்பு புகார்

அறைக்கு அழைத்து    தலைமை ஆசிரியர் ஈரோடு, பிப். 8-

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தனபாக்கியம் என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அவர் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகம் வந்து மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டர் சுடலைக்கண்ணனிடம் புகார் மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
 
நான் புஞ்சை புளியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். அங்கு பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு மாலை 4 1/2 மணிக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது.
 
இந்த பணியில் நான் ஈடுபட்டு இருக்கும்போது பள்ளி தலைமை ஆசிரியர் என்னை அவரது அறைக்கு அழைத்து இரவு 7.30 மணி வரை அங்கு இருக்கும்படி வற்புறுத்துகிறார். அதற்கு மறுப்பு தெரிவித்தால் அருவறுக்கத்தக்க வார்த்தை பேசிதகாத முறையில் நடக்க முயற்சிக்கிறார்.
 
மேலும் அவர் சகஊழியர்கள் மத்தியில் என்னை உண்மைக்கு மாறாக பேசி அவமானப்படுத்தி வேதனைப்பட வைக்கிறார்.
 
இதுபற்றி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் ஏற்கனவே புகார் மனு கொடுத்துள்ளேன். தலைமை ஆசிரியரின் செக்ஸ் தொல்லையால் மனஉளைச்சலில் தவித்து வருகிறேன். எனவே இது தொடர்பாக தக்க நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுகொள்கிறேன்.
 
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர் மீது ஆசிரியை கொடுத்துள்ள செக்ஸ் புகார் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


source:maalaimalar


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails