Thursday, February 11, 2010

பாம்பு புகுந்ததால் பரபரப்பு: மாணவிகள், ஆசிரியைகள் ஓட்டம்

சென்னையில் பெண்கள் கல்லூரி விழாவில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு: மாணவிகள், ஆசிரியைகள் ஓட்டம்
 சென்னையில்    பெண்கள்  கல்லூரி  விழாவில்    பாம்பு  புகுந்ததால்  பரபரப்பு:     மாணவிகள், ஆசிரியைகள் ஓட்டம்சென்னை, பிப். 11-
 
சென்னை காயிதே மில்லத் கல்லூரியில் கலை- அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு படிக்கும்போதே தொழிற்கல்வி படிக்கும் புதிய திட்ட தொடக்க விழா நடந்தது. மாணவிகள், பேராசிரியைகள் ஏராளமானோர் விழா நடைபெறும் இடத்தில் கூடியிருந்தனர்.
 
அப்போது பாம்பு ஒன்று சீறிப்பாய்ந்து வந்தது. இதைப் பார்த்து சில மாணவிகள் பாம்பு... பாம்பு... என்று அலற மற்ற மாணவிகளும் பேராசிரியைகளும் பயந்து போய் ஓடிச்சென்று பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டனர்.
 
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பயந்து போய் யாரும் பாம்பை அடிக்காததால், யாரிடமும் பிடிபடாமல் தப்பிச்சென்றது. அது சிறிய பாம்பு என்றாலும் 30 நிமிட நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.
 
இதற்கிடையே விழா 11 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. அமைச்சர் பொன்முடி வருகை தாமதத்தால் நண்பகலில் விழா தொடங்கியது

source:maalaimalar

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails