Tuesday, August 19, 2008

இன்டர்நெட் தொலைபேசிக்கு `டிராய்' அனுமதி,கம்ப்ïட்டரில் இருந்து செல்போனை தொடர்பு கொள்ளலாம்


இன்டர்நெட் தொலைபேசிக்கு `டிராய்' அனுமதி
கம்ப்ïட்டரில் இருந்து செல்போனை தொடர்பு கொள்ளலாம்


புதுடெல்லி, ஆக.19-

இன்டர்நெட் தொலைபேசி வசதிக்கு `டிராய்' (தகவல் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்) நேற்று அனுமதி அளித்தது. சர்வதேச தரத்துக்கு ஏற்ற வகையில் இந்திய தகவல் தொடர்பு துறையை உருவாக்குவதற்காக இத்தகைய முடிவை எடுத்து இருப்பதாக `டிராய்' தெரிவித்தது.

தற்போது, இரண்டு கம்ப்ïட்டர்களுக்கு இடையே மட்டும் `வாய்ஸ் மெயில்' மூலமாக தொடர்பு கொள்ள முடியும். செல்போன் அல்லது சாதாரண தொலைபேசியில் இருந்து கம்ப்ïட்டரை தொடர்பு கொள்ள முடியாது. ஆனால் `டிராய்' அனுமதியை தொடர்ந்து இனிமேல் தனிப்பட்ட கம்ப்ïட்டரில் இருந்து சாதாரண தொலைபேசி மற்றும் செல்போன்களை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் இந்த முடிவின் காரணமாக, இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு பல வழிகளில் வருவாய் கிடைக்கும். அதே நேரத்தில், எஸ்.டி.டி. பேசுவதற்கான கட்டணங்கள் பெரிய அளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=432839&disdate=8/19/2008

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails