Wednesday, August 6, 2008

அமர்நாத் பனிலிங்கம் அம்பலமாகும் மோசடி

அமர்நாத் பனிலிங்கம் அம்பலமாகும் மோசடி

- சார்வாகன்

இமயமலையில் 3800 மீட்டர் உயரத்தில் ஒரு சுண்ணாம்புக் கல் குகை. இதில் பனிக்கட்டி மேலெழும்பிக் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் காட்சியளிக்கும். எதையும் பிறப்பு உறுப்பு களோடு தொடர்புபடுத்தியே பார்க்கும் இந்து மதத்தினர் இதை சிவலிங்கம் என்று சொல்லி வருகின்றனர். பனியால் ஆனதால் பனிலிங்கம்.

லிங்கம் என்பது ஆண்குறி. ஆவுடைலிங்கம் என்பது பெண் குறியுடன் சேர்ந்த ஆண்குறி. ஓம் என்பது பெண் குறி. நாமத்தில் வெள்ளைக் கோடுகள் சுக்கிலம் (ஆண்விந்து) சிவப்புக் கோடு (பெண் சினை முட்டை) இப்படி இந்து மதத்தில் எல்லாமே அது தான்! அப்படித் தான் பனி லிங்கமும்.

கூடுதலாகப் பனிலிங்கத்திற்கு ஒரு கதையைக் கட்டிவிட்டார்கள். அந்தக் குகையில்தான் சிவன் பார்வதிக்கு வாழ்வின் இரகசியங்களைக் கற்றுக் கொடுத்தான் என்கிற கதை. 15 அடிக்குப் பத்தடி அளவுள்ள குகையில் கற்றுத் தரும் வாழ்க்கை இரகசியம் என்னவாக இருக்கும்? கொக்கோக ரகசியம் என்று பழங்காலத்தில் வருணிக்கப்பட்ட சமாசாரம் தானே!

இது - இந்த இடம் - வழிபாட்டுக்குரியதா? வணங்குதற்குரியதா?

வாரம் இரண்டு முறை வரும் அக்கப்போர் ஏடு ஒன்று ஒன்றுமே தெரியாத பாப்பா மாதிரி பனிமலையில் மத எரிமலை என்று செய்தி வெளியிடுகிறது. எப்படி அங்கே மத எரிமலை வந்தது? இம்மாதம் 10ஆம் தேதி கூட காஷ்மீரின் பெரிய முஃப்டி அமர்நாத் யாத்ரீகர்களைச் சந்தித்து வாழ்த்து கூறியுள்ளாரே!

பனிலிங்கத்துக்கு 40 ஏக்கர் நிலம் கொடுத்தார்கள். முசுலிம் அமைப்பு எதிர்த்தது. நிலத்தைத் திரும்பப் பெற்று விட்டார்கள். ஆனாலும் மாநில அரசு கவிழ்ந்து விட்டது.

இவை, முழு உண்மையா? பனிலிங்கத்தைச் சுற்றிக் கோயிலுக்கு வருபவர்களுக்குத் தங்கும் விடுதிகள் கட்ட சற்றுக்குறைய 40 எக்டேர் நிலம் ஒதுக்கப்பட்டது. 40 ஏக்கர் அல்ல. ஒரு எக்டேர் என்பது 2.47 ஏக்கர். 40 எக்டேருக்குச் சற்றுக் குறைவாக 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப் பட்டது. அக்கப்போர் ஏடு உண்மையை எழுதவேண்டும்.

இந்த நிலம் வனத்துறை நிலம். வனத்துறை நிலத்தைக் காடு வளர்ப்பதற்கு அல்லாத வேறு காரியத்துக்குப் பயன்படுத்தக்கூடாது என்பது வனச் சட்டம். தவிர்க்க முடியாமல் தேவைப்படு கிறது என்றால் இந்திய அரசின் ஒப்புதலுடன் இருமடங்கு வேறு நிலம் கொடுத்தால்தான் ஒரு மடங்கு வனநிலத்தைப் பெறமுடியும். அமர்நாத் விசயத்தில் 100 ஏக்கர் வனநிலத்திற்கு 200 ஏக்கர் நிலம் மாநில அரசு தரவேண்டும். தந்தார்களா? இல்லை, இந்திய அரசின் ஒப்புதல் பெற்றார் களா? இல்லை.

பின் எப்படி நிலம் தந்தார்கள்? ஆளுநரின் நிர்ப்பந்தம். இப்போதிருக்கும் ஆளுநர் அல்ல. பதவி முடிந்துபோன முன்னாள் ஆர்மிக்காரர், எந்நாளும் ஆர்.எஸ்.எஸ்.காரரான சின்கா. இப்போதிருக்கும் ஆளுநர் வோரா மக்கள் எதிர்ப்பைக் கண்டு நிலம் தேவையில்லை என்று எழுதிவிட்டவர். எனவே இவருக்கும் பிரச்சினைக்கும் தொடர்பில்லை என்பதை அக்கப்போர் ஏடு அறிந்து கொள்ளவேண்டும்.

இங்கே விசுவ இந்து பரிசத்துக்கு என்ன வேலை? பிரவீண் தொகாடியா ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்? பொய்யை மட்டுமே பேசுவது எனச் சங்கல்பம் எடுத்துக்கொண்டு இந்து வேடம் போடும் ஜைனர் இவர். திரிசூல தீட்சை புகழ் திருமேனி இவர். 100 ஏக்கரை 40 ஏக்கர் என ஏடு எழுகிறது என்றால் இந்த அரிச்சந்திரன் 39 ஏக்கர் என்கிறார். அதுவும் வெறும் 39 ஏக்கராம்? அதுதான் வெறும் நிலமாயிற்றே, அதற்கேன் போராட்டம்?

இரண்டு மாதங்கள் மட்டுமே பனிலிங்க தரிசனம் எனும்போது சுற்றுச்சூழல் பாதிக்கப் படாது என்கிறார், பரிசுத்தவான்! அவர் பார் வைக்காக தினமணிகதிர் ஏட்டில் கீதாவாசன் என்பார் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியைக் கீழே தந்திருக்கிறோம்.

எல்லாமே இலவசமாகக் கிடைப்பதால், இந்த யாத்திரையை மேற்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது... தொண்டு நிறுவனங்கள் இலவச தின்பண்டங்களை இயற்கையால் எளிதில் ஜீரணிக்க முடியாத பாலிதீன் பைகளிலும் அலுமினியத் தாள்களிலும் அளிக்கின்றன. பண்டங்களைத் தின்று முடித்ததும் பயணிகள் தூக்கி எறியும். அந்த பிளாஸ்டிக் பைகள் மண்ணில் மட்காமல் கிடந்து சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றன. எழில் மிகுந்த இடங்கள் எங்கும் இறைந்து கிடந்த இந்த பிளாஸ்டிக் குப்பைகள் காண்போரின் கண்களை உறுத்தின. நீரோடைப் பாதைகளில் குவிந்துவிடும் இவற்றால் தேங்கும் குட்டைகள் உருவாயின. நிரூற்றுகள் அடைபட்டு நின்றன.. சொல்லி வைத்தாற்போல் அவர்கள் அனைவரும் கழிப் பிட வசதிகளை அமைத்திருந்த இடம் ஆற்றுப் படுகைகளே. இதனால் அங்கு காலார நடந்து இயற்கையை ரசிக்கவோ நீரில் ஆடிக்களிக் கவோ முடியவில்லை. கீழுள்ள கிராமங்களுக்கு நீர் வசதி தரும் ஆற்று நீர் அசுத்தம் ஆவதை, யாரும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

(தினமணி கதிர், 11.10.1998)

 

போதுமா ஆதாரம்? சுற்றுச் சூழல் பத்தாண்டுகளுக்கு முன்பே பாதிக்கப்பட்டு விட்டது என்பதும் மேலும் கெடுதல் கூடுதலாகக் கூடாது என்பதும் நல்லவர்களின் எண்ணம், குறிக்கோள்! இதற்கும் பிரவீணுக் கும் தான் தொடர்பு கிடையாதே!

காஷ்மீர் மாநிலத்திற்கு அரசமைப்புச் சட்டப் பிரிவு 370-இன்படி உள்ள தனி அந்தஸ்து இதற்குக் காரணம் என்றும், அதை ரத்து செய்யாதவரை இந்நிலை தொடரும் என்று கரித்துக் கொட்டுகிறார்.

ஆறு ஆண்டுக்காலம் அடல்பிகாரி வாஜ்பேயி ஆண்டாரே, அப்போது இந்தப் பிரிவை நீக்கியிருக்கலாமே! ஏன் செய்ய வில்லை? நாள் பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்து விட்டு இப்பொழுது ஏன் புலம்பல்?

பனிலிங்கம் என்கிறார்களே, வழிபடும் பொருள் என்கிறார்களே, இது என்ன புண்ணிய பாரத பூமிக்கு மட்டும் சொந்தமானதா? உலகின் பல பகுதிகளிலும் இம்மாதிரி அமைப்பு உண்டே! இதனை ஸ்டாலக்மைட் (Stalagmite) என்கிறார்கள். கிரேக்கச் சொல் ளுவயடயபஅய என்பதிலிருந்து இங்கிலீஷ் சொல் வந்தது. கிரேக்கச் சொல்லுக்கு "சொட்டு" (Drop) சொட்டுதல் (Drip) என்னும் பொருள். சுண்ணாம் புக் குகைகளில் மேலிருந்து கீழாகக் கொட்டும் குளிர் நீர்க் குழம்பால் சேர்ந்து கீழி ருந்து மேல் நோக்கி வளர்ந்து காணப்படும் கால்சியம் கார்பனேட் என்கிறது என்சைக்ளோபீடியா!

இதே முறையில் குகையின் மேலேயிருந்து கீழ் நோக்கித் தொங்கிக் கொண்டிருப்பது (Stalactite) ஸ்டாலக்டைட் எனப்படுகிறது.

விஞ்ஞான விளக்கம் இப்படி இருக்கும் போது இது லிங்கம், பரமசிவனுக்கும் பார்வதிக்குப் பலான விசயம் சொல்லிக் கொடுத்த பவித்ரமான பகுதி இந்துக்கள் தானே! விசுவ இந்து பரிசத் தானே!

சுற்றுலாப் பயணிகள் வந்து பார்க்கும் இத்தகைய குகைகளில் இவற்றைத் தொடக் கூடாது என எச்சரிக்கை விடப்படுகிறது. ஏன்?

நொடி தோறும் இது வளர்கிறது; தொட்டால் வளர்ச்சி தடைபடும். கையில் உள்ள எண்ணெய்ப் பசை, அழுக்கு முதலியவை பட்டால் அவற்றின் நிறமே நிரந்தரமாக மாறிவிடும்.

இந்நிலையில் இவர்கள் மூன்று கல் அடுப்பு மூட்டியோ, கெரசின் ஸ்டவ்வைக் கொளுத்தியோ ரொட்டி சுட்டால் ஏற்படும் புகை முழுவதும் 15 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள சூழலைப் பாதிக்கும் என்பதோடு பனி லிங்கத்தையே பாழ்படுத்தி விடுமே!

தொட்டதனாலும், ரொட்டி சுட்டதனாலும் போன ஆண்டு பனிலிங்கம் கரைந்து போய் பல்லை இளித்ததே! அதனால்தானே போன ஆண்டு இருந்ததைவிட உயரமான கிரில்கேட் போட்டிருக்கிறார்கள் இந்த ஆண்டு! மறுக்க முடியுமா பிரவீண் தொகாடியா?

இரண்டு மாதங்களில் பனிலிங்கம் தரிசனம் செய்கிறார்கள். மீதி மாதங்களில் என்ன ஆகிறது பனிலிங்கம்? அதைக் கூறியிருக்க வேண்டாமா, அறிவு நாணயத்தோடு!

இதோ, தினமணி கதிர் கூறுகிறது படியுங்கள்: எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய ஏமாற்றம் அமர்நாத் லிங்கத்தைப் பற்றியதே! ஜம்மு காஷ்மீர் சுற்றுலாக் கழகக் கையேட்டில் இந்த லிங்கம் இயற்கையாக வளர்ந்த பனிலிங்க உருவம் என்றும் அது சந்திரனின் கலையை ஒட்டி வளர்வதும் தேய்வதுமானது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை முற்றிலும் நம்பி சடி எனும் குகை மூடும் திருவிழா நடக்கும் ஆகஸ்ட் மாதம் பவுர்ணமியன்று பனி லிங்கத்தைத் தரிசிக்கச் சென்றேன். பனி முழு வதும் உருகிக் கரைந்து அதன் உள்ளிருந்த சுண்ணாம் புக்கல்லால் ஆன லிங்க வடிவிலான மோல்டை (Mould) மட்டுமே கண்டு திரும்பினேன்.

(கீதாவாசன்: தினமணி கதிர், 11.10.1998)

பத்தாண்டுகளுக்கு முன்பே பனிலிங்க மோசடி பற்றி தினமணி கதிர் 11.10.1998 ஏட்டில் எழுதிய கீதாவாசன் (அன்று) 53 வயதான மலையேற்றப் பயணங்களை மேற்கொண்டு வருபவர்.

அந்த இடம் தூய்மையான இடம் என்று உருகி உருகி மாய்ந்து போகிறார்களே, பிரவீண் தொகாடியாவும் வேதாந்தமும்! இதையும் படியுங்கள், இந்து மத யாத்ரீகர்களின் யோக்யதையைத் தெரிந்து கொள்ள!

இந்த மோல்டின் மீது உருவான பனி லிங்கமே அமர்நாத் லிங்கம் என்பதையும் அது ஜூலை மாதம் குகை திறக்கப்படும் சிராவண பவுர்ணமியன்று மட்டுமே முழு வளர்ச்சியுடன் காணப்படும் என்பதையும் அறிந்து கொண் டேன். இதன் அருகிலேயே பனிக்குவியலின் வடிவில் இருந்த பார்வதி, கணேச லிங்கங்கள், கையேட்டில் காட்டப்பட்டுள்ள அளவுள்ள கச்சிதமான பனிலிங்க வடிவம் இயற்கையாக அமைய முடியாது என்பதை அறிவுபூர்வமாக உணர்த்தின.

ஆக இயற்கையில் ஏற்படுவதை, தெய்வாம்சம் எனக் கூறிப் பித்தலாட்டத்தில் ஈடுபடுகிறது இந்து மதம். பிரேசில் நாட்டின் மினாஸ் கிராய்ஸ், அயர்லாந்தில் கவுன்ட்டி கிளார், தி பர்ரன், லெபனானில் ஜெயட்டா க்ரோட்டோ, நியுஜிலாந்தில் ரோட்டருவா முதலிய பல இடங்களிலும் கிரீஸ் நாட்டிலும் இப்படிப் பட்ட ஸ்டாலக்மைட்களும் ஸ்டாலக்டைட் களும் காணப்படுகின்றன. அவற்றையெல்லாம் ஏசுவின் விரல்கள், கால்கள், கைகள் எனக் கூறி யாரும் வணிகம் செய்யவில்லை.

சுண்ணாம்புக் கட்டை கட்டி அதன்மீது கால்சியம் கார்பனேட் படிந்து காணப்படும் நிலையை - முன்னதாகச் செயற்கை முறை, பிறகு இயற்கை முறை - என்று ஏற்பாடு செய்து ஏய்த்து வரும் இந்து மதப்புரட்டு சபரிமலை மகர விளக்குப் புரட்டு போல வெளிச்சத் திற்கு வரும்! உண்மை தெரியும்!
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails