Thursday, August 21, 2008

ஸ்பெயினில் விமான விபத்து : 153 பேர் பலி

ஸ்பெயினில் விமான விபத்து : 153 பேர் பலி
ஸ்பெயினின் மாட்ரிட் நகரத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது.

இதனை செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்த அந்நாட்டின் மேம்பாட்டு அமைச்சர் மக்தேலனா அல்வாரெஸ், இந்த விபத்தில் 19 பேர் உயிர் பிழைத்தனர் என்றும், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது என்றும் தெரிவித்தார்.

விபத்துக்குள்ளான விமானத்தில், மொத்தம் 172 பேர் பயணம் செய்ததாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாட்ரிட்டிலுள்ள பராஜஸ் விமான நிலையத்தில் இருந்து எம்.டி.-82 விமானம் நேற்று மாலை புறப்பட்டபோது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அவ்விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று, பின்னர் தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது.

விமானம் நொறுங்கியது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இது விபத்து தான் என உறுதியாக தெரியவந்துள்ளதாக, ஸ்பெயின் அமைச்சர் மக்தேலனா மேலும் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails