Monday, September 14, 2009

மஹிந்த ராஜபக்ச நாற்காலியில் இருந்து திடீரென கீழே விழுந்தார்

நாற்காலியில் இருந்து திடீரென வீழ்ந்த ஜனாதிபதி - வீழ்ச்சியின் ஆரம்பம் என்கிறார்கள் ஜோதிடர்கள்



 
ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற தேசிய சாகித்திய விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, திடீரென தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து கீழே விழுந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவத்தில், மஹிந்தவுக்கு முதுகில் உபாதையும் ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதான உரையை நிகழ்த்தாமலே, விழாவில் இருந்து, வெளியேறியுள்ளார் அவர்.ஜனாதிபதிக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஆசனம், பின்பக்கம் சரிந்ததாலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
உடனடியாக கீழே விழுந்த ஜனாதிபதியை தூக்கிய அவரது பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள் வேறு ஆசனத்தில் அமரச்செய்துள்ளனர். பின் கலாச்சார அமைச்சின் செயலாளர் நடாத்திய நன்றியுரைக்கு பின்னர், சிலருக்கு மட்டும் விருதுகளை வழங்கி கௌரவித்த ஜனாதிபதி, அங்கிருந்து அகன்றுள்ளார். வீழ்ந்ததினை படம்பிடித்த கமேராக்களின், படச்சுருள்களும் ஜனாதிபதி தரப்பினால் கட்டாயப்படுத்தி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

எதிர்வரும் ஒக்டோபர் நடுப்பகுதிக்கு பிறகு ஜனாதிபதிக்கு, நல்ல காலம் இல்லை என ஏற்கனவே தெரிவித்திருந்த ஜோதிடர்கள், தற்போது இச்சம்பவம், ஜனாதிபதியின் வீழ்ச்சிக்கான ஆரம்பம் என தெரிவித்திருக்கின்றனர். அண்மையில் இடம்பெற்ற சனிப்பெயர்ச்சியானதே ஜனாதிபதிக்கு இப்பாதகமான பலன்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கின்றனர் அவர்கள்
source:4tamilmedia

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails