Wednesday, September 23, 2009

இராணுவத்தினருடன் நேரடி மோதல்! விடுதலை புலி போராளிகள் இருவர் வீரச்சாவு

 



  

ltte_logoதிருகோணமலை தம்பலகாமத்தில் கடந்த 05-09-2009 அன்று இரவு 8.15 மணிக்கு சிறீலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலில் போது போராளிகள் இருவர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது.

இந்த மோதலின் போது திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான லெப்.கேணல் பொழிலன் (சிவகுமார்), கப்டன் சசியன் (யோகரட்ணம் சசிகரன்) ஆகியோரே வீரச்சாவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாயக விடுதலைக்காக இன்னுயிர்களை ஈர்ந்த இம் மாவீரர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றனர்



source:nerudal
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails