Tuesday, September 1, 2009

திஸ்ஸநாயகம் தீர்ப்பு -அமெரிக்கா கண்டனம்

 
 

தமிழ் ஊட்கவியலாளர் திஸ்ஸநாயகத்துக்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளமைக்கு அமெரிக்கா தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கானது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவாலும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்த தீர்ப்பையொட்டியும், அதிலுள்ள குரூரம் பற்றியும் தாம் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியிருப்பதாக அரச திணைக்கள துணைப் பேச்சாளர் ரொபேர்ட் வூட் கூறியுள்ளார். இலங்கை ஊடக சுதந்திரம் பற்றி தாம் தொடர்ந்து கவனத்தில் எடுத்து வருவதாகக் கூறிய அவர், இலங்கை ஊடகவியலாளர்கள் மிரட்டல்கள் மற்றும் சுய தணிக்கைககளைச் செய்யவேண்டி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

திஸ்ஸநாயகத்தின் வழக்கானது மேன்முறையீடு செய்யப்பட்டு விசாரணைகள் நடத்தப்படும்போது, அதுபற்றி தாம் மேலும் உன்னிப்பாக கவனிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ள வூட், சிறையிலுள்ள திஸ்ஸநாயகத்தில் உடல் ஆரோக்கியம், பாதுகாப்பு என்பவற்றுக்கு இலங்கை அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


source:athirvu
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails