Wednesday, September 2, 2009

கேரளாவில் கல்லூரி மாணவிகளை காதலித்து தீவிரவாதிகளாக மாற்றும் கும்பல்-பரபரப்பு தகவல்கள்



கேரளாவில்
கல்லூரி மாணவிகளை காதலித்து தீவிரவாதிகளாக மாற்றும் கும்பல்
பரபரப்பு தகவல்கள்


திருவனந்தபுரம், செப்.2-

கேரளாவில் கல்லூரி மாணவிகளை காதலித்து தீவிரவாதிகளாக மாற்றும் கும்பல் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன

கல்லூரி மாணவிகள்

கேரளமாநிலம் பத்தனம்திட்டையில் உள்ள ஒரு கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் 2 பேர் கடந்த சிலமாதங்களுக்கு முன் திடீரென மாயமானார்கள். இதைத்தொடர்ந்து அவர்களின் பெற்றோர், கேரள உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு (ஹேபியஸ் கார்பஸ்) மனு தாக்கல் செய்தனர்.

அதன்படி மேற்கண்ட 2 மாணவிகளையும் கண்டு பிடித்து ஆஜர்படுத்த கேரள போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அந்த மாணவிகளை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

விசாரணையில் திருமண ஆசை காட்டி அந்த மாணவிகளை கட்டாய மதமாற்றம் செய்ய, இளைஞர்கள் சிலர் முயற்சி செய்து இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கேரள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீவிரவாதிகளாக...

இதற்கிடையே இதுகுறித்து மத்திய உளவுத்துறையினரும் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அந்த இளைஞர்கள் புனித போர் நடத்தினால் சொர்க்கம் கிடைக்கும் என்று அந்த மாணவிகளை மூளை சலவை செய்துள்ளதும், அதோடு சில தற்கொலை தாக்குதல் வீடியோ காட்சிகளையும் காட்டி உள்ளதும் தெரியவந்தது.

இந்த கும்பல் மாணவிகளை ஏமாற்றி காதலித்து தீவிரவாதிகளாக மாற்ற முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள மாநில போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில போலீசார் தனிப்படை அமைத்து தீவிர புலன்விசாரணை நடத்தி வருகிறார்கள்.


 

source:dailythanthi
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails