Saturday, November 21, 2009

`பேச்சு' மூச்சை விடுகிறது

அமெரிக்காவின் ஏ.பி.சி. தொலைக்காட்சி நிலையங்கள் மூலம் ஒளிபரப்பாகும் மிகப் பிரபல டி.வி. தொடர் ஓப்ரா வின்ஸ்பிரேயின் `டாக் ஷோ'. இன்று நமது சேனல்கள் பலவற்றில் வாரா வாரம் ஒளிபரப்பாகும் `பேச்சு மன்றங்கள்', டாக்ஷோவுக்கு கிடைத்த உலகளாவிய வரவேற்பால் உருவானவைதான். 140 நாடுகளில் ஒளிபரப்பாகும் டாக்ஷோவை அமெரிக்காவில் மட்டும் சராசரியாக 71 லட்சம் பேர் பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 25 ஆண்டுகளாக இந்த டாக்ஷோவை நடத்தி வரும் வின்ஸ்பிரே(55) பொழுதுபோக்கு நிகழ்ச்சி மூலம் உலகில் அதிக பணம் சம்பாதிக்கும் பெண்மணிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். அது மட்டுமின்றி உலக பணக்காரர்கள் வரிசையில் 45-வது இடத்தையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தற்போது இந்த நிகழ்ச்சியின் மூச்சை நிறுத்துவதற்கு அவர் முடிவு செய்திருக்கிறார். ஆம், 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டாக்ஷோவை அவர் முடித்துக் கொள்ளப் போவதாக அறிவித்து இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம், அவரே சொந்தமாக ஒரு டெலிவிஷன் சேனல் தொடங்க இருப்பதுதான். அதற்கு ஓன்(சொந்தம்) என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதில் அவரது டாக்ஷோவை வேறு பெயரில் காணலாம்.

source:dailythanthi

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails