
Saturday, November 21, 2009
மாஸ்கோவில் பாதிரியார் சுட்டுக் கொலை
மாஸ்கோ, நவ.21-
ரஷியத் தலைநகர் மாஸ்கோவின் தெற்கு பகுதியில் உள்ள செயின்ட் தாமஸ் தேவாலயத்திற்குள் நேற்று முன்தினம் இரவு முகமூடி அணிந்த ஒரு மர்ம மனிதன் நுழைந்தான். அங்கிருந்த பாதிரியாரிடம் பெயரைக் கூறும்படி கேட்டான். அவர், டேனியல் சிசோயேவ் என்று தனது பெயரைச் சொன்னதும், அந்த முகமூடி மனிதன், கைத்துப்பாக்கியால் பாதிரியாரை சுட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டான். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கொலை செய்யப்பட்ட பாதிரியார் சிசோயேவ் தனது சமூக சேவை பணிகளால் ரஷிய இளைஞர்களிடையே புகழ்பெற்றவர், ஆவார்.

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment