Monday, July 14, 2008

ஐபிஎல் போட்டியில் ஊக்கமருந்து : திடுக்கிடும் தகவல்

ஐபிஎல் போட்டியில் ஊக்கமருந்து : திடுக்கிடும் தகவல்
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் போட்டியின்போது கிரிக்கெட் வீரர் ஒருவர் ஊக்கமருந்து அருந்தியது சோதனையில் தெரியவந்துள்ளதாக புதிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது, ஒவ்வொரு ஆட்டத்திலும், ஒவ்வொரு அணியில் இருந்து 2 வீரர்களுக்கு ஊக்க மருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின்போது, வீரர் ஒருவர் ஊக்க மருந்து அருந்தியது தெரியவந்துள்ளதாக உலக ஊக்க மருந்து எதிர்ப்பு ஏஜென்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஐபிஎல் ஆகியவற்றுக்கு அந்த ஏஜென்சி கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐபிஎல் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், இந்த சோதனை அறிக்கை முதல் கட்டம்தான் என்றும், மேலும் பல்வேறு கட்டங்களுக்குப் பிறகுதான் ஊக்க மருந்து சோதனையில் கிரிக்கெட் வீரர் ஒருவர் சிக்கியது உறுதியாகும் என்று தெரிவித்தார். இந்நிலையில், ஊக்க மருந்து பயன்படுத்திய கிரிக்கெட் வீரர் யார் என்ற பரபரப்பு தற்போது உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
http://www.kumudam.com

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails