Thursday, July 31, 2008

இண்டர்நெட் மையங்களை மூட உத்தரவு


பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் தலீபான்கள் மிரட்டல்
இண்டர்நெட் மையங்களை மூட உத்தரவு


இஸ்லாமாபாத், ஆக.1-

பாகிஸ்தானின் பழங்குடி இனமக்கள் வசிக்கும் பகுதியில் செல்வாக்கு செலுத்தி வந்த தலீபான், அல்கொய்தா தீவிரவாதிகள், இப்போது வளம் கொழிக்கும் பஞ்சாப் மாநிலத்திலும் அதிகாரம் செலுத்த முற்பட்டு உள்ளனர். அவர்கள் இண்டர்நெட் மையங்களை மூடும்படியும், கேபிள் டி.வி. ஒளிபரப்புகளை நிறுத்தும்படியும், இசை தட்டுக்கள் மற்றும் சி.டி.க்களை விற்கும் கடைகளை மூடும்படியும் மிரட்டல் விடுத்து உள்ளனர். பர்தா அணியாத பெண்களின் முகங்கள் மீது அமிலத்தை வீசப்போவதாகவும் அவர்கள் மிரட்டல் விடுத்து உள்ளனர். இதற்கு 15 நாள் அவகாசம் கொடுத்து உள்ளனர்.

முசாபர்கர் நகரில் உள்ள 36 இண்டர்நெட் மையங்களுக்கும், மியுசிக் சி.டி.கடைகளுக்கும் கடந்த 18-ந்தேதி மிரட்டல் இ.மெயில்களும் கடிதங்களும் வந்து உள்ளன என்று போலீஸ் தெரிவித்து உள்ளது.

இதுபோல கோட் அட்டு நகரில் உள்ள இண்டர்நெட் மையங்களுக்கு கடந்த 29-ந்தேதி மிரட்டல் கடிதங்கள் வந்து உள்ளன. அவர்கள் தங்களின் வர்த்தகத்தை மூடிவிட்டு இஸ்லாமிய நெறிக்கு உட்பட்ட வர்த்தகத்தை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

 

 http://www.dailythanthi.com/article.asp?NewsID=429224&disdate=8/1/2008

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails