Sunday, July 27, 2008

குண்டு வெடிப்புக்கு முன் மும்பையில் இருந்து வந்தஇ-மெயில் மிரட்டல்: முடிந்தால் குண்டு வெடிப்பை தடுத்து பாருங்கள்

குண்டு வெடிப்புக்கு முன் மும்பையில் இருந்து வந்தஇ-மெயில் மிரட்டல்: முடிந்தால் குண்டு வெடிப்பை தடுத்து பாருங்கள்

ஆமதாபாத்,ஜுலை. 27-

கோத்ரா சம்பவத்துக்கு பழிக்கு பழிவாங்குவோம், முடிந்தால் அதை தடுத்து பாருங்கள் என்று தீவிர வாதிகளிடம் இருந்து இ மெயிலில் மிரட்டல் வந்தது. மும்பையில் இருந்து இந்த மிரட்டல் வந்ததாக தெரிய வந்துள்ளது.

ஆமதாபாத்தில் 14 இடங் களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன் தீவிரவாதிகளிடம் இருந்து 10 நிமிடங்களுக்கு முன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு
அந்த மிரட்டல் வந்துள்ளது. டெலிவிஷனுக்கும் இந்த மிரட்டல் அனுப்பப் பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு இருந்த தாவது:-

இன்னும் 5 நிமிடங்கள் காத்திருங்கள் மரணத்தின் பயங்கரத்தை உணரப் போகிறீர்கள்.

புனித போர் (ஜிகாத்) மீண்டும் தொடங்கி விட்டது. குஜராத்தில் கோத்ரா சம்பவத் துக்கு பழிவாங்கப் போகிறோம் இந்தியாவில் உள்ள முஜாகதீன்களும், பிடாயின்களும் தயாராகி விட்டனர். முடிந்தால் அவர் களை தடுத்துப் பாருங்கள் புனித போரின் பயங்கரம் என்ன என்பதை உணரப் போகிறீர்கள்.

மத்திய பிரதேசம், மராட்டியம், ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் விரைவில் குண்டுகள் வெடிக்கும்.

குஜராத் முதல் மந்திரி நரேந்தர மோடிக்கு பாடம் கற்பிப்போம். நரேந்திர மோடியே உங்கள் மாநிலத்திலேயே நாங்கள் தாக்குதல் நடத்துகிறோம் பாருங்கள்.

இவ்வாறு அந்த மிரட்டல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மிரட்டல் கடிதத்தின் முன் பகுதியில் 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவர படமும் இருந்தது.

ஆமதாபாத் குண்டு வெடிப்புக்கு நாங்கள் தான் பொறுப்பு ஏற்கிறோம் என்றும் கூறியுள்ள அந்த கடிதத்தில் அல்அர்பி, குரு அல் ஹிந்தி என்று கையெழுத்து போடப்பட்டுள்ளது.

இந்த இ மெயில் மும்பை யில் இருந்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. நீத் ஹேவுட், சி.1503-1504, கினியா சி.எச்.எஸ்.பிளாட், செக்டார் 2, 3, 16-ஏ, சம்பாடா, மும்பை என்ற முகவரி இருந்தது.

மும்பையில் உள்ள ஒரு வாடகை வீட்டில்தான் மிரட்டல் கடிதத்தை அனுப் பியவன் தங்கி இருந்ததாக தெரிகிறது.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails