Monday, July 14, 2008

மருத்துவ குறிப்புகள்

தொண்டைக்கட்டு சரியாக என்ன சொய்யலாம்?
மாவிலையின் கொழுந்தைக் கொண்டு வந்து கருகி விடாமல் வறுத்தெடுத்து, பொடியாக்கி அத்துடன் சிறிது சர்க்கரை சேர்த்து கால் ஸ்ப+ன் அளவு காலை மாலை சாப்பிட்டு வந்தால்,ஒரே நாளில் தொண்டைக்கட்டு சரியாகி விடும்.

சளித்தொல்லை நீங்க
துளசிச் சாறு ஓர் அவுன்ஸ் தினசரி குடித்து வந்தால் சளித்தொல்லை தலை காட்டாது ஓடிவிடும்.மூக்கில் நீர் வடிந்தால் ஜாதிக்காயை நீர்விட்டு உறைத்து மூக்கின் மேல் பற்றுபோட்டால் நீர் கசிவது நின்றுவிடும்.குழந்தைகளுக்கு சளிபிடித்திருந்தால் துளசிச் சாறும் தூதுவளைச் சாறும் சமபங்கு கலந்து காலை மாலை ஒரு தே.கரண்டி கொடுத்தால் சளி கரைந்துவிடும்.பெரியவர்கள் தூதுவளை,ஆடாதோடைக் கீரைகளை சாப்பிட்டால் சளித்தொல்லை நின்றுவிடும்.

பல் பராமரிப்பு
பல் பராமரிப்பிற்கான ஒழுங்கு முறைகள் வருமாறு:-
1. சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். 

 
2ஃபுளொரைட்டு கலந்த பற்பசையை பயன்படுத்துங்கள்.
 
3. சிலருக்கு உமிழ்நீர் சுரப்பு குறைந்து காணப்படுவதால் வாய் வரண்டு போய் காணப்படும். இப்படிப்பட்டவர்கள் உமிழ்நீர்சுரப்பை அதிகப்படுத்துவதற்காக சர்க்கரைச் சத்து இல்லாத இனிப்புக்களை வாங்கி சாப்பிடலாம். இதற்கு மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
4. பற்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் மருத்துவரை ஆரம்ப நிலையிலேயே சந்திக்க வேண்டும்.
5. நீங்கள் ஏற்கனவே ஏதாவது மருந்து மாத்திரை சாப்பிட்டு தூரிகை வந்தீர்களேயானால் அதுபற்றி மருத்துவரிடம் முதலில் சொல்லுங்கள்.
6. தூரிகை பயன்படுத்துவதிலும் ஈறுகளை தேய்ப்பதிலும் ஏதாவது பிரச்சினை இருந்தால் அதுபற்றி மருத்துவரிடம் கூறுங்கள்.

பற்களின் பெருமை ஈறுகளின் வலிமையைப் பொறுத்தே அமையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கொலஸ்ட்ரோல் கட்டுப்பாடு
சற்று கவனமாக இருந்தால்,நீங்கள் சாப்பிடக்கூடிய உணவுகளில் கொலஸ்ட்ரோல் அளவைகட்டுக்குள் வைத்திருக்க முடியும். தற்போது பல்வேறு உணவகங்களில் குறைந்த கொலஸ்ட்ரோல்|,குறைந்த கொழுப்பு கொண்ட உணவுகளை பரிமாறுகின்றனர்.அப்படி இல்லாத பட்சத்தில் அற்த உணவு எந்த முறைகளில் தயாரிக்கப்பட்டது என்பதுபற்றி விவரத்தை அறிந்து கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும். அந்த வகையில் கீழ்க்கண்ட முறைகளில் தயாரிக்கபட்ட உணவுகளாக இருந்தால் அவற்றில்கொலஸ்ரோல் மற்றும் கொழுப்பு அதிகமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
1. வறுத்தது.
2. முறகலானது.
3. கொஞ்சமாக தண்ணீரில் வேக வைத்து மாமிசம் கலந்து தயாரிக்கப்படும் உணவுகள்
4. உபயோகமற்ற பொருட்களை அதிகமாக பயன்படுத்துவது.
5. வெண்ணெய் அல்லது பழுப்பு நிற ரொட்டித்துண்டுகளைச் சுற்றி சமைப்பது.
6. மெல்லிதாக இழைக்கப்பட்ட உருளைக்கிழங்கு துண்டுகளை கொழுப்பில் போட்டு வறுப்பது.
7 . பெரிய அளவிலான வான் கோழிகளை அப்படியே சமைப்பது.இவைகளுக்கு பதிலாக:-
1. வேக வைத்தவை.
2. பிரகாசமாக நெருப்பில் சமைத்தவை.
3. சூடான அடுப்பில் சமைக்கப்பட்பவை.
4. சூடான நீரில் சமைத்தவை.
5. புதிய உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்.

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்
காற்றோடு கலந்து பரவும் விஷக் கிருமிகளைத் தன்பால் கிரகித்துக் கொள்கின்ற சக்தி வெங்காயத்துக்கு மட்டும் உண்டு. தினமும் அதிகாலை ஒரு வெங்காயத்தை சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் வாழ்நாள் முழவதும் எந்த நோயும் அணுகாது.

உடலுக்கு உடனடியாக குளிர்ச்சியை உண்டு பண்ணுகிற சிறப்புச் சக்தி வெங்காயத்திற்கு உண்டு. வெங்காயத்தை 2 துண்டுகளாக வெட்டி முகர்ந்தாலும் வாயில் போட்டு சப்பினாலும் வாந்தியை தவிர்க்கலாம். தொற்று நோய் பரவியுள்ள இடங்களுக்குச் சென்றால் கொ}ஞ்சம் வெங்காயம் எடுத்து செல்வது நல்லது. நோய் கிருமிகள் நம்மைப் பாதிக்காது.

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடலாமா?
நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் ஒரு பொருள் வெங்காயத்தை வெறுமனேருசிக்காக மாத்திரம் சேர்த்து வருகிறோம்.அது தவிர இதனைப் பற்றி சிறிதும் சிந்திப்பது கிடையாது.இது எப்படிப்பட்டது,இதனை மருத்துவக் குணங்கள் என்ன என்றெல்லாம் எடுத்து நோக்கும் பொழுது வெங்காயத்தின் மகிமையினை உணர்ந்து கொள்ளலாம்.

வெங்காயத்தைச் சாப்பிடும் பொழுது வேகவைத்துச் சாப்பிவதே மிகவும் சிறந்த முறையாகும். அதற்காகப் பச்சையாகச் சாப்பிடக் கூடாதென்பதல்ல.பச்சையாகச் சாப்பிடுகிறவர்கள் சிறிது நேரம் வீட்டில் தங்கிவிட்டு வெளியில் செல்வதாயின் செல்லவும்.காரணம் பச்சையாக சாப்பிட்டவர்கள், மற்றவர்களுடன் கதைக்கும் பொழுது வெங்காய வாடை வீசும்.

ஏனையோர் அவ்வாடையினால் வெறுப்படைய வாய்ப்புக்கள் நிறையவே உண்டு. ஏனென்றால், நூற்றுக்குத் தொண்ணூறு சதவீமானவர்கள் வெங்காய வாடையை வெறுப்பாகள்.

இவ்வெங்காயத்தினை காய்கறிகளுடன் சேர்த்து சமைக்கும் பொழுது அவ்வுணவு வகைகள் தனிச்சுவை பொற்றுவிடுகின்றன்அது மட்டுமல்ல,இதன் மருத்துவக் குணங்களை எடுத்து நோக்குவோமானால் அது ஒன்றிரண்டு என மட்டுப்படுத்தி விட முடியாது.நிறையவே மருத்துவக் குணங்களை கொண்ட ஒன்று தான் வெங்காயம்.

இது பற்றி மருத்துவத்துiயினர் சிறப்பாக எடுத்துக் கூறுகின்றனர்.வெங்காயம் நச்சுக் கிருமிகளைக் கொல்லுவதுடன் உடற்பருமன் ஏற்பட்டு விடாமலும் பாதுகாக்கிறது.இதனைத் தொடர்ச்சியாக உண்டு வருகையில் உங்கள் குரல் வளம் இனிமை பெறும்.அழகிய குரல் வளம் பெற விரும்புகின்றவர்கள் மேற் கூறிய விடயத்தைக் கைக்கொள்ளலாம். கிராணி, விஷக்கடி, குழிப்புண் ஆகியவற்றையும் குணமடையச் செய்வதுடன்,பித்தத்தையும் தணியச் செய்யும் குணமும் இதற்குண்டு மூளை சுறுசுறுப்பாக இயங்கவும்,காக்கை வலிப்பு போன்ற கெட்ட நோய்கள் நீங்கவும்,வெங்காயம் வழி சமைக்கின்றது.

காலையில் ஒன்று அல்லது இரண்டு வெங்காயங்களைத் தனியாகவோ உண்வுகளுடனோ சோர்த்து உண்டு வந்தால் அன்று முழுவதும் உஷ்ணம், வேறு பிணிகள் எம்மை எட்டிக்கூடப்பார்க்க மறுக்கும். கோடை காலத்தில் ஒரு வெங்காயத்தைப் பச்சையாக சாப்பிட்டால்,மயக்கம் போன்ற தன்மைகள் எம்மை அணுகாது என மருத்துவர்கள் கருத்துரைக்கின்றனர்.

வெங்காயச் சாறு பக்கவாதம், நரம்புத்தளர்ச்சி ஆகியவற்றுக்குக் கைகண்ட மருந்தாகும். இதனைத் தொடர்ச்சியாக உண்டு வந்தால் பக்கவாதம் ஏற்படாமல் தவிக்க முடியுமென இந்தியாவிலுள்ள மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் ஒன்று அறிவித்துள்ளது.

குறிப்பாக புகைபிடிப்பவர்கள் வெங்காயத்தை நாட வேண்டும். காரணம், இப்பழக்கத்தினால் நுரையீரல்,இதய நோய்கள் ஏற்படுகின்றன. நச்சுப் பொருளால் இரத்தம் கெடுகின்றது. இவ்வாறன புகைப் பழக்கத்தையுடையவர்கள் வெங்காயத்தை உண்டு வரலாம்.

இவ்வாறு உண்பதால் புகைப் பழக்கத்தாலேற்படும் ஆபத்துகளைத் தவிர்க்க முடியும். மொத்தத்தில் வெங்காயம் ஒரு உணவுப்பொருளாகவும், மருத்துவப் பொருளாகவும் இருந்து வருகின்றது.
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails