Tuesday, July 1, 2008

பெட்ரோல், டீசல் கடும் தட்டுப்பாடு : சென்னையில் பொதுமக்கள் அவதி

சென்னை : சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து, பெட்ரோல் பங்குகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை அண்மையில் உயர்த்தப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் சாதாரண பெட்ரோலுக்கு தட்டுப்பாடு நிலவிவருகிறது. இந்நிலையில் நேற்று பிரிமியம் பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பும் குறைந்ததால், நகரின் பல்வேறு பெட்ரோல் நிலையங்களில் வாகனங்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் அந்தப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், காவல்துறையினர் விரைந்துவந்து போக்குவரத்தை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். சென்னை துறைமுகத்திற்கு டீசல் ஏற்றிவரும் டேங்கர் கப்பலின் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதே இந்தத் தட்டுப்பாட்டிற்குக் காரணம் என்றும், இன்னும் ஓரிரு தினங்களில் இந்த சிக்கல் தீர்க்கப்பட்டுவிடும் என்றும் பெட்ரோல் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில் பெட்ரோல் பங்குகளில் இன்றும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால் போக்குவரத்து பாதிப்பு இன்றும் தொடர்கிறது.

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails