Sunday, July 6, 2008

புஷ்சை விட ஆபத்தானவர் அத்வானி : அமர்சிங்

புஷ்சை விட ஆபத்தானவர் அத்வானி : அமர்சிங்
அமெரிக்க அதிபர் புஷ்சை விட ஆபத்தானவர் பா.ஜனதா கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் ல்.கே. த்வானி என சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது :

ஏகாதிபத்தியத்தை விட மதவாதம் ஆபத்தானது.இன்றைய தினம் இடதுசாரிகள், பிஎஸ்பி, பா.ஜனதா மற்றும் சவுதாலா ஆகியோர் அரசுக்கு எதிராக ஒன்று சேர்ந்து வாக்களிக்கலாம்.ஆனால் அது குறித்து நாங்கள் ஏதும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனக்குள்ள பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் எங்களது கட்சியின் நிலை என்ன எனக் கேட்கப்படுகிறது.அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை கோரட்டும். அப்போது எங்களது நிலையை நாங்கள் முடிவு செய்கிறோம்.

பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரை சந்தித்தபோது அவர்கள் எங்களிடம் ஆதரவு கோரவுமில்லை; நாங்களும் ஆதரவு அளிப்பதாக வாக்குறுதியளிக்கவுமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails