Wednesday, May 28, 2008

விமானப்படை குண்டுவீச்சில் விடுதலைப்புலி பெண் தளபதி பலி


விமானப்படை குண்டுவீச்சில்
விடுதலைப்புலி பெண் தளபதி பலி


கொழும்பு, மே.28-

இலங்கையின் மன்னார் பகுதியில் ஆண்டான்குளம் என்ற இடத்தில் உள்ள விடுதலைப்புலிகளின் தளம் மீது விமானப்படை ஹெலிகாப்டர்கள் நேற்றுமுன்தினம் குண்டுவீசின. இந்த குண்டுவீச்சில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த பெண் தளபதியான டோரா பலியானார்.

மன்னார் முன்னரங்க பகுதியில் வேலகுளம், மாம்புலிகுளம், நெடுங்கந்தல், முனிமுறிப்பு உள்ளிட்ட இடங்களில் ராணுவத்துடன் நடைபெற்ற மோதல்களில் 10 விடுதலைப்புலிகள் பலியானார்கள். வவுனியா பகுதியில் 6 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர். வெலிஓயாவில் ஜனக்புரா அருகே விடுதலைப்புலிகளின் முக்கிய தளங்களை குறி வைத்து ராணுவத்தினர் பீரங்கி தாக்குதல் நடத்தினர். இதில் 14 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர். இதே பகுதியில் நடந்த மற்றொரு சண்டையில் 3 விடுதலைப்புலிகள் உயிரிழந்தனர். 5 பேர் காயம் அடைந்தனர். மற்றொரு சம்பவத்தில் ஆண்டான்குளத்தில் 4 விடுதலைப்புலிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது.

இந்த தகவல்களை ராணுவ தகவல் மையம் தெரிவித்து உள்ளது.

 http://www.dailythanthi.com/article.asp?NewsID=415377&disdate=5/28/2008

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails