Wednesday, May 28, 2008

சேலத்தில் நாடக நடிகை வெட்டிக்கொலை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்



சேலம், மே.29-

சேலத்தில் நாடக நடிகை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். நிர்வாண நிலையில் அவர் பிணமாக கிடந்தார். கொலையாளி யார்? ஏன் கொலை செய்தார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாடக நடிகை

சேலம் கிச்சிப்பாளையம் பேச்சியம்மன் நகரை சேர்ந்தவர் சாந்தி என்ற செல்வமேரி (வயது 41), நாடக நடிகை. இவருடைய கணவர் மாசிலாமணி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு வளர்மதி (23), சத்யா (21) என்ற 2 மகள்களும், செல்வம் (19) என்ற மகனும் உள்ளனர்.

கணவர் இறந்த பின்பு சாந்தி நாடகங்களில் நடித்து தன் குழந்தைகளை வளர்த்து வந்தார். மகள்கள் வளர்ந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கியபிறகு சாந்தி நடிப்பது இல்லை. ஆனால் மகள்களுக்கு நாடகங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை வாங்கித் தருவார்.

இவர்களில் செல்வம் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். வளர்மதியும், சத்யாவும் நாடகங்களில் நடித்து வருகிறார்கள்.

வெட்டிக் கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் வளர்மதியும், சத்யாவும் நாடகங்களில் நடிப்பதற்காக வெளிïர் சென்றுவிட்டனர். செல்வமும், சத்யாவுக்கு துணையாக வெளிïருக்கு சென்றிருந்தார். வீட்டில் சாந்தி மட்டும் தனியாக இருந்தார்.

நேற்று காலை செல்வமும், சத்யாவும் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அவருடைய தாய் சாந்தி ரத்த வெள்ளத்தில் நிர்வாண நிலையில் பிணமாக கிடப்பதை பார்த்து அலறினார். அவருடைய தலையில் அரிவாளால் வெட்டப்பட்ட வெட்டுக்காயம் இருந்தது.

சாந்தி கொலை செய்யப்படுவதற்கு முன்பு அங்கு ஒரு போராட்டமே நடந்துள்ளதற்கு அறிகுறியாக வீட்டில் அலமாரியில் இருந்த துணிமணிகள், பொருட்கள் எல்லாம் வெளியே சிதறிக்கிடந்தன.

செல்போன் மாயம்

சாந்தி தன்னுடைய உபயோகத்துக்காக ஒரு செல்போன் வைத்திருந்தார். போலீசார் அந்த செல்போன் நம்பருக்கு அழைத்தபோது, அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. எனவே கொலையாளியே, அந்த செல்போனை தூக்கிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் சாந்தியை கொலை செய்ய பயன்படுத்திய அரிவாளும் சிக்கவில்லை. அதுவும் போலீசாரின் சந்தேகத்தை அதிகரித்துள்ளது.

சாந்தியை கொலை செய்த மர்ம மனிதன் யார்? ஏன் கொலை செய்தான்? என்ற விவரம் தெரியவில்லை. சாந்தி தனியாக வீட்டில் இருப்பதை அறிந்துதான் அந்த ஆசாமி வீட்டுக்கு வந்துள்ளான் என்பதாலும், கொலை செய்யப்பட்ட சாந்தியின் உடல் நிர்வாண நிலையில் இருந்ததும் போலீசாரிடம் பல்வேறு ïகங்களை ஏற்படுத்தியுள்ளது. பல கோணங்களில் தங்கள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

சாந்தி நாடக நடிகை என்பதால் அவருக்கு நாடகங்களில் நடித்த வகையில் யார், யாருடன் பழக்கம் உண்டு என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=415571&disdate=5/29/2008

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails