Tuesday, May 27, 2008

காவல் நிலையத்தில் கொள்ளையடித்தது

 
ர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் துப்பாக்கிகளும் வாக்கி டாக்கியும் களவுபோய் மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், காவல் நிலையத்தில் கொள்ளையடித்தது யார் என்பது இன்று வரையில் கண்டுபிடிக்கப்படவே இல்லை.

குற்றவாளிகள் யார் என்பதை உறுதிபடக் கூற முடியாத போலீஸார் பலரையும் சந்தேகக் கண்கொண்டு விசாரித்து வருகின்றனர். குறிப்பாக, சம்பவ தினத்தன்று இரவு நேர காவல் பணியில் ஈடுபட்டிருந்த அதியமான் கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் கிருஷ்ணன், சென்ட்ரி காவலராக இருந்த சுப்பிரமணியம், ஏட்டுக்கள் ராஜமாணிக்கம் மற்றும் ராஜா இவர்களுடன் காவல் நிலையத்தில் தாற்காலிக டைப்பிஸ்ட்டாக வேலை பார்த்து வந்த செந்தில்குமார் ஆகியோரிடம் கடுமையான விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

அவர்களில் ராஜமாணிக்கம், ராஜா என்ற இரண்டு ஏட்டுகளையும் விசாரணை என்ற பெயரில் கொடூரமாகச் சித்திரவதை செய்கிறார்கள் என்று சம்பந்தப்பட்ட ஏட்டுகளின் குடும்பத்தினர் முதலமைச்சர் வரையில் முறையிட்டிருக்கின்றனர்.

தர்மபுரி ஆயுதப்படைக் காவலர் குடியிருப்பில் வைத்து ரகசியமாக விசாரிக்கப்பட்டு வரும் ஏட்டுகளை எப்போதாவது சந்திக்க அவர்களது குடும்பத்தினருக்கு அனுமதி தரப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று அப்படி அவர்களைச் சந்தித்துவிட்டுத் திரும்பிய ஏட்டுகளின் குடும்பத்தினர், கொதிப்புடன் வெளிப்படையான போராட்டத்தில் இறங்கி விட்டனர்.

தர்மபுரி ஆட்சித் தலைவரின் காரை மறித்து "தர்மபுரி மாவட்ட எஸ்.பி.யின் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை'' என்று கூறிய அவர்கள், தங்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்று முறையிட்டி ருக்கின்றனர். அவர்களிடம் பேசிய தர்மபுரி ஆட்சியர் அமுதாவும் சட்டத்துக்குட்பட்ட உதவிகளை நிச்சயம் அவர்களுக்குச் செய்வதாகக் கூறி சமாதானம் செய்திருக்கிறார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட காவலர்களின் குடும்பத்தினரைச் சந்திக்க நாம் தர்மபுரி சென்றோம். பாப்பாரப்பட்டியில் வசித்து வரும் ஏட்டு ராஜமாணிக்கத்தின் மனைவி சிவகாமியை முதலில் சந்தித்தோம். "கடந்த பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி வேலைக்குப் போனவர் இன்று வரையில் வீடு திரும்பவேயில்லை. இவரையும் இவரோடு வேலை பார்த்த ராஜா என்ற மற்றொரு ஏட்டையும் தவிர, மற்ற அனைவரும் விசாரணை யிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டனர்.

இவர்கள் இருவரும் பிறப்பால் தலித்துக்கள் என்பதால்தான் இந்தக் கொடுமை நடப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள். காவல்துறையில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிய என் கணவருக்கு காவல்துறை கொடுத்திருக்கும் கௌரவம் இதுதான். ஏற்கெனவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர் இன்று அடையாளமே தெரியாத அளவுக்கு உருக்குலைந்து காணப்படுகிறார். இந்தத் துப்பாக்கிகளை கொள்ைள யடிக்க உதவினால் என்ன துன்பம் நேரிடும் என்பது அனுபவஸ்தரான அவருக்குத் தெரியாதா? என் கணவர் ஏமாளி என்பதாலும் அதிகாரிகளை எதிர்த்துப் பேசாதவர் என்பதாலும் அவரைக் குற்றவாளியாக்கி வழக்கை முடித்துவிடும் முயற்சி நடக்கிறது.

`அப்ரூவர் ஆகி நாங்கள் தரும் வாக்குமூலத்தில் கையெழுத்திடு' என்று அவரை டார்ச்சர் செய்கிறார்கள். கண்களைக் கட்டி எங்கெங்கோ கூட்டிக் கொண்டுபோய் அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். அவர் வயதுக்கான மரியாதையைக்கூட தராமல் `வாடா, போடா, நாயே' என்றெல்லாம் கேவலமாகப் பேசியிருக்கின்றனர்'' என்றார் கதறியழுதபடி.

ஏட்டு ராஜமாணிக்கத்தின் மகள் மேகலை நம்மிடம், "என்னுடைய அப்பாவை அடித்து உடலெங்கும் காயப்படுத்தியிருக்கிறார்கள். இரண்டு நிமிடங்கள்தான் அவரைப் பார்ப்பதற்கான அவகாசமாக எங்களுக்குத் தரப்படும். என் அப்பா தி.மு.க. விசுவாசி. விரைவில் கலைஞரைக் குடும்பத்தோடு சந்தித்து எங்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியைப் பற்றி முறையிடப் போகிறேன்'' என்றார் கொதிப்போடு.

பாதிக்கப்பட்ட மற்றொரு ஏட்டு ராஜாவின் மனைவி கலையரசியைச் சந்தித்தோம். "அதியமான்கோட்டை காவல்நிலையத் துப்பாக்கி கொள்ளை சம்பவத்துக்கும் என் கணவருக்கும் எள்ளளவும் தொடர்பு இல்லை. இதை நம்பாமல் அவருக்கு என்னென்னவோ சோதனைகளையெல்லாம் செய்தார்கள். ஆனால் எந்தச் சோதனையிலுமே என் கணவரைக் குற்ற வாளியென்று நிரூபிக்க முடியவில்லை. நிரபராதி என்று தெரிந்த போதும் கூட, உண்மைக் குற்றவாளிகளைப் பிடிக்க முடியாமல், இவரையும் இன்னொரு ஏட்டையும் குற்றவாளிகள் ஆக்கி வழக்கை மூடி முடித்துவிட முயற்சிக்கிறார்கள். காலில் அடித்து, நிற்கமுடியாத அளவிற்குக் அவரை காயப்படுத்தியிருக்கிறார்கள்

`ராஜமாணிக்கம் துப்பாக்கியை திருடித் தந்தார். அதற்கு நான் உடந்தையாக இருந்தேன்' என்று தயாரிக்கப்பட்டிருந்த போலி வாக்கு மூலத்தில் கையெழுத்திடச் சொல்லி என் கணவரின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து மிரட்டியிருக்கிறார்கள். அடி தாங்க முடியாமல் கையெழுத்திட்டாலும் பாலக்கோடு நீதி மன்றத்தில் நீதிபதி முன்பாக `அது போலி வாக்குமூலம்' என்பதை என் கணவர் துணிந்து கூறி விட்டார். இதன் காரணமாக தற்போது மேலும் அவருக்குச் சித்திரவதைகள் அதிகரித்துள்ளன. உடனடியாக அவர் விடுவிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்திலாவது அவரை ஒப்படைக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை'' என்று அழுகையினூடே சொல்லி முடித்தார் கலையரசி.

ஏட்டுக்கள் ராஜமாணிக்கம், ராஜா ஆகியோரின் வழக்குரைஞரான கமலக் கண்ணனைச் சந்தித்தோம். "தர்மபுரி மாவட்ட எஸ்.பி.யைப் பொறுத் தவரையில் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் பேசுகிறார். `ஏட்டுக்கள் மீது எஃப்.ஐ.ஆரும் போடப்படவில்லை. அவர்களைக் கைதும் செய்ய வில்லை. அப்படி இருக்கும் போது எங்களிடம் அவர்களைப் பற்றி ஏன் கேட்கிறீர்கள்? உங்களுக்குத்தான் நீதிமன்றம் இருக்கிறதே. ஹேபியஸ் கார்ப்பஸ் மனு தாக்கல் செய்யுங்கள். நான் அதைச் சந்திக்கும் விதத்தில் சந்தித்துக் கொள்கிறேன்' என்று சவால்விடும் வகையில் பேசுகிறார்.

தர்மபுரி ஆட்சியரைச் சந்தித்து இதைப்பற்றி பேச முயன்றோம். ஆனால் அவரைச் சந்தித்துப் பேச எங்களுக்கு இதுவரையில் நேரம் ஒதுக்கப்படவில்லை. `குற்றவாளிகள்' என்று இரண்டு அப்பாவிகளைப் பிடித்துத் துன்புறுத்தி அவர்களை ஒப்புக் கொள்ள வைக்க முயற்சிக்கும் அக்கிரமம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த போலீஸ் விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று மனுச் செய்ய இருக்கிறோம்'' என்று கூறினார் அவர்.

மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் மூலமாக மனித உரிமைகள் கமிஷனில் இது குறித்து ஏட்டுகளின் குடும்பத்தினர் புகார் செய்திருக் கின்றனர். இன்னும் ஒரு வாரத்திற்குள்ளாக சட்டவிரோதமாக மேற்கொள் ளப்பட்டு வரும் விசாரணையிலிருந்து ஏட்டுகள் விடுவிக் கப்படவில்லை என்றால் சாலை மறியல், உண்ணாவிரதம் என சீரியஸான போராட் டங்களில் இறங்க சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் தீர்மானித் துள்ளனர்!

ஸீ வை. கதிரவன்

படங்கள் : ஆகாஷ்.
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails