Wednesday, May 28, 2008

புகை பிடிப்பது குழந்தைகளுக்கு தொந்தரவு தரும் விஷயம்

 
 
பிரேசிலியா: புகைபிடிப்பதன் தீமைகள் குறித்து மருத்துவர்கள் முதல் உறவினர்கள் வரை யார் அறிவுரை சொன்னாலும் சிலரால் அப்பழக்கத்தை விட்டு மீள முடிவதில்லை.

தற்போது உலகப் பொருளாதாரத்தில் விரைந்து முன்னேறிவரும் நாடுகளில் ஒன்றான பிரேசில், புகை பிடிப்பதற்கு எதிரான பிரச்சாரத்தை விரிவான அளவில் செய்து வருகிறது. புகை பிடிப்பது குழந்தைகளுக்கு தொந்தரவு தரும் விஷயம் என்பதை உணர்த்தும் வகையில் இந்தப் படத்தை சிகரெட் பாக்கெட்கள் மீது அச்சடித்திருக்கிறார்கள்.

இது அந்நாட்டு சுகாதாரத்துறையின் யோசனை. புகைக்கு எதிராக இதுபோன்ற 10 விளம்பரங்கள் இப்போது பிரேசில் நாட்டையே கலக்குகின்றன. இவற்றைப் பார்த்த பிறகாவது புகைப் பிரியர்கள் கொஞ்சம் திருந்தலாம். 
  
  http://www.dinakaran.com/daily/2008/may/29/high2.asp

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails