Sunday, March 23, 2008

தமிழ் ம்ணத்துக்கு ஒரு பகிரங்க மண்ணிப்புக் கடிதம்

தமிழ் மணத்தில் இருந்து இன்று(23-3-2008)மதியதில் இருந்து என் இணையம் நீக்கப்பட்டது என்று நான் கேள்விப்பட்டவுடம் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.அதன் காரணம் அறியாமல் நான் கீழ் கண்ட வகையில் தமிழ்மண நிர்வாகிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தேன்.
 
இது தான் அந்த கடிதம்
 

தங்களின் கீழ்கண்ட அறிவிப்பைக்கண்டவுடன் நாம் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்,தமிழ்மணத்தின் நிபந்தனைகளுக்கு நான் எந்த விதத்திலும் தெரிந்து தவறாக எழுதவில்லை.ஒரு சில பதிவர்கள் ஆபாசமாக தலைப்பிட்டு கட்டுரைகள் வெளியிட்டு வந்ததினால் நானும் அந்த வழிமுறைகளை பின்பற்றினேன்.கடந்த வாரத்தில் சூடான இடுகை இந்த காரணத்தினால் நீக்கப்பட்டவுடன் நானும் என் பதிவுகளின் தலைப்புகளை மாற்றிக்கொண்டேன்.சூடான இடுகை நீக்கப்பட்ட நாளில் இருந்து என் கட்டுரைகளின் தலைப்பை நீங்கள் பார்க்கலாம் நான் என் கட்டுரைகளை திருத்திய பின் அவைகளை நீக்கியது உண்மையாகவே அதிர்ச்சியாக உள்ளது.தமிழ்மணம் இது வரை எந்த வித எதிர்ப்பையும் வெளிடாத நிலையில் என் பதிவை நீக்கியது மனவருத்தத்தை அளிக்கிறது.

ஒரு சில பதிவர்கள் அதன் பின்னும் அதெ நிலையில் கட்டுரைகள் எழுதியுள்ளபோது என் பதிவை நீக்கியது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

என் பதிவில் எது தமிழ் மணத்தின் நிபந்தனைகளுக்கு எதிராக உள்ளது என்பதை சுட்டிக்காட்டுங்கள் நான் அவைகளை மாற்றவோ அல்லது அவைகளை நீக்கவோ செய்கிறேன்.

தாங்கள் என் பதிவை மீண்டும் தமிழ் மணத்தில் இணைக்க அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.

//From:
thamizmanam.com <listadmin@thamizmanam.com>
Cc:
listadmin@thamizmanam.com


<html>.<body>Dear
தெய்வமகன்,<br/>Your blog is Removed from listing by thamizmanam.com Administrator due to follwing reason,<p>Since your posts were against the policy of Thamizmanam, your blog has been removed from aggregation</p><br/>நிர்வாகி<br/>www.thamizmanam.com.</body></html//

 

எந்த தவறும் செய்யாத போது தமிழ்மணம் என்னை ஒரு சார்பாக இருந்து என்னை நீக்கிவிட்டது என்று நான் நினைத்திருந்தேன்.ஆனால் இரவு வரை இதைக்குறித்து யோசித்துக்கொண்டிருந்த நான் என் பதிவுகளை சுயப்பரிசோதனை செய்த போழுது நான் செய்த ஒரு தவறை உணர்ந்தேன்.

 

சிறைகளை நிரப்பும் முஸ்லிம்கள் - ஏமாற்றுவேலை என்ற தலைப்பில் நான் வெளியிட்ட கட்டுரையின் மூல தொடுப்பு கொடுக்கப்பட்டிருந்த விருது என்ற தள பதிவர் தமிழ்மணத்துக்கு எதிராக தனது வலைமலரில் எழுதியிருந்த வாசகங்களை பார்த்தவுடன் தான் நான் முட்டாள்தனமாக செய்த காரியம் எனக்கு பிடிபட்டது.

 

நான் இந்த வலைமலருக்கு சென்று எழுதப்பட்டிருந்த கட்டுரை நன்றாக இருந்த படியினால் என் பிளக்கரில் பதித்துவிட்டேன்.இது என் கவனமின்மையால் ஏற்பட்ட தவறுதான்.

 

இதற்காக நான் முழு மனதோடு தமிழ்மண நிர்வாகிகளிடம் பகிரங்க மண்ணிப்புக் கேட்டுக்கொள்ளுகிறேன்.ஏன் என்றால் என் இணையம் இவ்வளவு தூரம் வெளிஉலகுக்கு தெரிய முக்கிய காரணமாக பல திரட்டிகள் இருந்தாலும் தமிழ்மணமே அதில்முதலும்,முக்கியமுமாக இருந்தது.இதற்கு நான் என்றும் தமிழ்மணத்துக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்.ஆனால் இந்த தவறு என் கவனக்குறைவால் ஏற்பட்டபடியினால் உடனடியாக அந்த பதிவை என் வலைமலரில் இருந்து நீக்கிவிட்டேன்.\\

 

இந்த தவறு என்னுடையது ஆனபடியினால் நானாக திரும்பவும் என்னை தமிழ்மணத்தில் இணைத்துக்கொள்ளுங்கள் என்று கேட்கும் தகுதியை இழக்கிறேன்.தமிழ்மண நிர்வாகிகள் உண்மையை உணர்ந்து என் குறை பொருத்துக்கொண்டு எனக்கு இன்னொரு வாய்ப்புகொடுத்தால் நான் இந்த மாதிரியான பிழை ஏற்படாவண்ணம் மிகுந்த எச்சரிக்கையுடம் நடந்துகொள்ளுவேன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

 

ஒரு வேளை என்னை திரும்ப அனுமதிக்காவிட்டாலும் தமிழ்மணம் என் மனதில் என்றும் நீங்காத இடம்பிடித்த சந்தோஷத்தோடும்,நன்றி கலந்த இருதயத்தோடும்  தமிழ்மண பார்வையாளனாக இருந்துவிடுகிறேன்.

 

தமிழ்மணத்துக்கும்,என் சக வலைபதிவர்களுக்கும் என் ஆழ்ந்த வருத்தத்தையும்,நன்றியையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.நன்றி

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails