Wednesday, March 26, 2008

தமிழ்மண நிர்வாகி இரமணிதரன் தயவில் சில வாரங்கள் அதிகமாக உயிரோடு இருந்த பதிவர்கள்

நன்றிங்க இரமணிதரன்

தமிழ்மணம் குழுவினரின் செயல்பாடுகள் முழுக்க வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று எண்ணி, அதன் முதற்கட்டமாக கூடுமான வரை எங்களுடைய மின்னஞ்சல்களும், இடுகைகளும் பணியாற்றுபவர்/எழுதுபவர் பெயர் தாங்கி இடப்படவேண்டும் என்று முடிவு செய்தோம். எடுத்துக்காட்டாக தொழில் நுட்பக் குழுவில் பணியாற்றுபவர்கள், அவர்கள் செய்து முடித்த பணி குறித்து நேரடியாக பதிவர்களுக்கு அவர்களுடைய பெயர் தாங்கியே இடுகை எழுத வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்சசி அண்மையில் இரண்டு இடுகைகளை எழுதியிருந்தார். அதுபோலவே இடுகை நிர்வாகப் பணிகுறித்த மின்னஞ்சல்களில் அப்பணியாற்றுபவர்கள் தங்கள் பெயரிட்டு அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். தங்களுடைய பெயர்கள் வெளியிடப்படுவதனால் போலிகள் தங்களை அவதூறு செய்யக் கூடும் என்ற தயக்கம் எங்களிடம் இருப்பதும் உண்மையே. அதைத்தான் இப்பொழுது அனுபவிக்கிறோம். இருப்பினும் இந்த இடுகையையும் என்னுடைய பெயரில் எழுதுகிறேன். சில விசயங்களை பதிவர்களின் முன்பு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

 
 
நேற்று தமிழ்மணத்திலிருந்து சில இடுகைகளும் பதிவுகளும் நீக்கப் பட்டிருகின்றன. அவை நீக்கப்பட்டதற்கு தமிழ்மண நிர்வாகத்தில் பணிபுரியும் இரமணியுடன் எற்பட்ட தனிப்பட்ட பிரச்னைதான் காரணம் என்று ஒருசிலரால் பரப்பப்பட்டு வருகிறது. உண்மையைச் சொல்வதென்றால் நேற்று நீக்கப் பட்ட பதிவுகள் சில வாரங்களுக்கு முன்பே நீக்கப் படவேண்டும் என்று எங்கள் குழுவில் விவாதத்துக்கு வந்தபொழுது அப்பொழுது கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்க வேண்டாம், காத்திருந்து புரிய வைக்கலாம் என்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் ஒருவர் தற்பொழுது குற்றஞ்சாட்டப்படும் இரமணிதான். அதனாலேயே அப்பதிவுகள் இன்னும் சில வாரங்கள் நீடித்து நின்றன.
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails