Friday, March 21, 2008

உலகை ஆடை இல்லாமல் படம் பிடிக்கும் "மொசாத்"

இஸ்ரேல் மொசாத் போன்ற உளவு அமைப்பு?


 

மும்பை : "இஸ்ரேல் நாட்டின் "மொசாத்' போன்ற வலுவான உளவுப்பிரிவை இந்தியா அமைக்க வேண்டும். அப்போது தான், பயங்கரவாதிகளை பூண்டோடு ஒழிக்க முடியும்!'மும்பை வந்த, இஸ்ரேல் உளவுத்துறை நிபுணர் ஜாகி ஷாலோம், இப்படி கருத்து வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேல் "மொசாத்' உளவு அமைப்பு, மிகவும் வலுவானது; உளவுத் தகவல்களை சேகரிப்பது மட்டுமின்றி, ரகசிய நடவடிக்கைகளிலும் இறங்கி, எதிரியை பூண்டோடு ஒழிக்கும் சக்தி வாய்ந்தது.ஷாலோம், சமீபத்தில் மும்பையில், மேற்காசிய நாடுகளின் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் பங்கேற்றார்.பேட்டியில் அவர் கூறியதாவது: இந்தியாவில் "ரா' உளவு அமைப்பு உள்ளது; லஷ்கர்இதொய்பா, ஹிஸ்புல் முஜாகிதின் போன்ற பயங்கரவாத அமைப்புகள் பற்றி தகவல்களை சேகரிக்கிறது. ஆனால், அத்துடன் தங்கள் பணிகளை முடித்துக் கொள்கின்றன.

அவர்களை ஒடுக்கும் செயல்களையும் அவை மேற்கொள்ள வேண்டும்.உடனுக்குடன் செயல்பட்டு, பயங்கரவாதிகளின் வேகத்துக்கு ஈடுகொடுத்து ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதிகளுடன் கலக்க வேண்டும்; அதற்கு அவர்களில் ஒருவராக உளவு அமைப்பை சேர்ந்தவர்கள் சேர்ந்து விட வேண்டும். அது மிகவும் கஷ்டமானது தான். ஆனால், அதை துல்லியமாக செய்ய வேண்டும். அப்போது தான் அவர்களின் ஒவ்வொரு நடமாட்டமும் தெரியும். அவர்களின் நடமாட்டத்தை அறிந்து, அவர்களை முழுமையாக ஒடுக்குவது தான் உளவுப் படையின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். அதில் தான் முழு கவனம் செலுத்த வேண்டும். பாகிஸ்தான் ஆதரவில்லாமல், காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டகாசம் செய்ய முடியாது. இந்த விஷயத்தை, முழு ஆதாரங்களுடன் அமெரிக்கா போன்ற நாடுகளிடம் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். பாக்., அரசு ஆதரவில்லாமல், காஷ்மீர் பயங்கரவாதிகள் தொடர்ந்து பல ஆண்டாக தாக்குதல் நடத்த முடியாது. பயங்கரவாதிகளை ஒடுக்க, இந்தியாவுக்கு "மொசாத்' போன்ற உளவுப்படை தேவை. அதன் உளவு முறைகளை பின்பற்றினால், பயங்கரவாதிகளை அடியோடு ஒழிக்கலாம். அதற்காக, இஸ்ரேலுடன் கூட்டு சேரலாம்.இவ்வாறு ஷாலோம் கூறினார்..
http://www.dinamalar.com/

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails