Friday, August 7, 2009

செல்வராஜா பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்யப்படவில்லை: தாய்லாந்து பிரதமர் மறுப்பு

 

விடுதலைப் புலிகளின் வெளியுறவு பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன், தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்படவில்லை என தாய்லாந்தின் பிரதமர் அப்சிட் வெஜ்யஜிவா ரொய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
 
தமக்கு கிடைத்துள்ள தகவல்களின் படி, செல்வராசா பத்மநாதன், தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அவர் வேறொரு நாட்டில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளமையை தம்மால் உறுதி படுத்த முடியும் எனவும், அவர் எந்த நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டார் என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஏற்கனவே அவர் மலேசியாவில் வைத்து கைதானதாக வெளியான தகவல்களை இந்த செய்தி உறுதிப்படுத்துகிறது.
 
இதற்கிடையில் சர்வதேச காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் வெளியுறவு பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails