Tuesday, July 14, 2009

சீனர்களை கொன்று குவிப்போம்:அல்குவைதா மிரட்டல்

 

 சீனாவில் முஸ்லீம் உய்கூர் இனத்தினரை அந் நாட்டு அரசு கொன்று குவித்ததையடுத்து அரேபியா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் வாழும் சீனர்களை கொன்று குவிக்கப் போவதாக அல்-குவைதா மிரட்டல் விடுத்துள்ளது.

 சீனாவின் ஜிங்ஜியாங் மாகாணத்தில் பெருவாரியாக வசிக்கும் முஸ்லீம் உய்கூர் இனத்தினர் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை சீனா இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியது.

கடந்த வாரத்தில் ஓரிரு நாட்களி்ல் நூற்றுக்கணக்கான உய்கூர் மக்கள் ராணுவம், போலீசார் மற்றும் சீனர்களால் கொல்லப்பட்டனர்.
 
இதையடுத்து அல்குவைதா இ மெயில் மூலம் விடுத்துள்ள மிரட்டலில், அல்ஜீரியாவில் பணியாற்றி வரும் 50,000 சீனர்களை தாக்கிக் கொல்வோம். ஆப்பிரிக்காவில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனங்களையும் அதன் ஊழியர்களையும் தாக்கி அழிப்போம் என்று மிரட்டல் விடுத்துள்ளது.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails