Monday, July 13, 2009

தேசிய தலைவரின் கடைசி மகனின் இறந்த படம் வெளியாகியுள்ளது

 
 

தேசிய தலைவரின் கடைசி மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவம் உயிருடன் பிடித்து பிறிதொரு பகுதிக்கு எடுத்துச் சென்றதாக, இராணுவ உயர் அதிகாரி ஒருரை ஆதாரம்காட்டி, சிங்கள இணையம் செய்திவெளியிட்டுள்ளது. படத்துடன் வெளிவந்துள்ள அச் செய்தியில் , பாலச்சந்திரனை ஒரு சிறுவன் என்று கூடப் பாராமல், அவரை அடித்துக் கொலைசெய்ததாகக் சொல்லப்படுகிறது. அரக்கத்தனமாக, பின் மண்டையில் அடித்து கொலைசெய்த இராணுவத்தினர், பின்னர் இறந்த சிறுவனின் உடல் மீது துப்பாக்கியால் சுட்டு, போர் பிரதேசத்தில் இறந்தவர்போல மாற்றியுள்ளனர்.

இவ்வாறு சிங்கள இணையத்தளம் செய்திவெளியிட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கையில் இன்று முதல் அவ் இணையத்தளம் அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இச் செய்திகளையும், படங்களையும், அதிர்வு இணையத்தால் உறுதிசெய்ய முடியவில்லை என்பதனையும் அறியத்தருகிறோம்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails