Thursday, July 2, 2009

கொல்லப்பட்டது 'மாவீரன்' பிரபாகரன் அல்ல...... கை ரேகை ஒப்பீடு நிரூபணம்! உளவுத்துறை 'ரா' அதிர்ச்சி........

 
              இந்திய உளவுத்துறை 'ரா' அதிர்ச்சி........

     
      கொல்லப்பட்டது    'மாவீரன்'   பிரபாகரன் அல்ல......       கை ரேகை ஒப்பீடு நிரூபணம்!
 

                                                                      
தி.மு.க வினர் ஏற்கனவே வகித்துவந்த துறைகளை அப்படியே இந்த முறையும் கொடுக்க வேண்டும் என்று, பிரதமர் மன்மோகன்சிங்கிடம் போராடிய  தி.மு.க தலைவர் கலைஞர், பேச்சோடு பேச்சாக, 'பிரபாகரன் போர்க்களத்தில் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டதாகக் கூறுவது நம்பும்படியாக இல்லையே. பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றால், அதை என்னிடம் உறுதிப்படுத்த வேண்டியது மத்திய அரசின்கடமையல்லவா... பிரபாகரன் விஷயத்தில் என்ன நடக்கிறது என்று எனக்குப் புரியவில்லை...." என்று குறிப்பிட்டதாக தி.மு.க நாடளுமன்ற கட்சி வட்டாரம் கூறுகிறது!

 தமிழக முதல்வர் கலைஞர், பிரமர் மன்மோகன் சிங்கிடமே இவ்வாறு கடுமையாகப் பேசியிருப்பதன் காரணமே, அவருக்கு பிரபாகரன் மரணம் தொடர்பான அச்சம் பெருமளவு இருந்ததுதான் என்று, அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்! இதன் அடிப்படையில், 'நெற்றிக்கண்' புலணாய்வுக் குழு விரிவான விசாரணையை நடத்தியது. இதன் தொகுப்பு :

 விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச் செல்வன், சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார். அப்போது, தமிழக முதல்வர் கலைஞர் கண்ணீர் கவிதை ஒன்றை 'முரசொலி'யில் எழுதினார்! ஜெயலலிதா உட்பட பலரும் இதனைக் கண்டித்தார்கள்!

 பிரபாகரன் கொல்லப்பட்டதாக் கூறுவதை, முதல்வர் கலைஞர் நம்பவில்லை என்பதால்தான், பிரபாகரன் தொடர்பாக கண்ணீர் அஞ்சலி கவிதையை கலைஞர் எழுதவில்லை! 'மாவீரன்' பிரபாகரான் உயிரோடுதான் இருக்கிறார் என்பதற்கு, இது ஒரு நிரூபணம்! அடுத்து...

 'மாவீரன்' பிரபாகரனின் 'கை விரல் ரேகை' சென்னை போலீசாரால் 1982 ல் இரண்டு முறை பதிவு செய்யப்பட்டு, பாதுகாப்பில் இருக்கிறது!
சென்னை - பாண்டிபஜார் போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள 'கீதா கேப' ஓட்டல் வாசலில், போராளிகள் இயக்கங்களில் ஒன்றான 'வுநுடுழு' அமைப்பின் தலைவரான ஸ்ரீசபாரத்தினத்தின மீது, 'கரிகாலன்' என்கிற பிரபாகரன் தனது கைத் துப்பாக்கியால் சுட்டார். ஸ்ரீசபாரத்தினமும் பிரபாகரனை நோக்கிச் சுட்டார். கரிகாலன் என்கிற பிரபாகரனுடன் நிரஞ்சன் என்பவரும் இருந்தார்! சுற்று வட்டாரம் பரபரப்படைகிறது!  
பாண்டிபஜார் க்ரைம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், தி.நகர் சரக சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சுகுமார் இருவரும் ஸ்பாட்டுக்கு விரைந்து சென்று, அனைவரையும் கைது செய்து, துப்பாக்கிகளை பறிமுதல் செய்ததுடன், பாண்டிபஜார் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டுசென்றனர். அங்கு 'லாக்-அப்' வசதி இல்லாததால், சங்கிலியால் அவர்களது கால்களை மரபெஞ்சில் இணைத்துக் கட்டி வைக்கின்றனர்! அந்த சமயத்தில் பிரபாகரன் உள்ளிட்ட அனைவரது கை விரல் ரேகைகள் பாண்டிபஜார் க்ரைம் போலிசாரால் பதிவு செய்யப்பட்டு, அங்க அடையாளங்களும் குறிக்கப்பட்டது! பிரபாகரனின் இரண்டு கைகளிலும் உள்ள பத்து விரல்களின் ரேகைகளும் பதிவு செய்யப்பட்டது!

 கரிகாலன் என்பது பிரபாகரனின் புனைப்பெயர்களில் ஒன்று. பிரபாகரன் - ஸ்ரீசபாரத்தினம் துப்பாக்கிச் சூட்டிச் சண்டை விவரம், அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி. ஆருக்கு தெரிவிக்கப்படுகிறது. அவரது உத்தரிவின்படி, இந்த துப்பாக்கிச் சண்டை வழக்கு, சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு (உஉp) மாற்றப்படுகிறது!
 
 பிரபாகரன், நிரஞ்சன், ஸ்ரீசபாரத்தினம் மூவரும் சென்னை மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்திற்கு (கமிஷ்னர் ஆபீஸ்), அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, யுனுஐ- சண்முகம், பிரபாகரன் உள்ளிட்ட மூவரையும் விசாரித்தனர்! பிரபாகரன், நிரஞ்சன், ஸ்ரீசபாரத்தினம் ஆகிய மூவரது கை விரல் ரேகைகளும் அங்க அடையாளங்களையும் மீண்டும் ஒரு முறை யுனுஐ சண்முகம் பதிவு செய்தார்!
 
• இதைத் தவிற பிரபாகரனின் கை அங்க அடையாளங்களும் ரேகைப் பதிவுகள், அங்க அடையாளங்களும் இந்திய அரசிடமோ இலங்கை அரசிடமோ கூட கிடையாது என்று புலிகளின் தலைமை வட்டாரம் கூறுகிறது! 


• 1986ல் சென்னை - திருமங்கலத்தில், தனது குடும்பத்துடன் தங்கியிருந்தார், பிரபாகரன். பெசண்ட் நகரில், வீட்டு வசதி வாரிய வீட்டில் பிரபாகரனின் தளபதிகளான கிட்டு, மாத்தையன், பேபி சுப்பிரமணியம் போன்ற தளபதிகள் தங்கியிருந்தனர்!

  அந்த சமயம், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் உத்தரவின்படி, விடுதலைப் புலிகள் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்!
 
 திடீரென்று, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த அனைவரையும் நாடு கடத்த உத்தரவிட்டது மத்திய அரசு!

 முதல்வர் எம்.ஜி.ஆரால் இதனைத் தடுத்து நிறுத்த இயலாத சூழல்!

• அப்போது சென்னையில் தங்கியிருந்த பிரபாகரன், கிட்டு, மாத்தையன் மூவரையும் சென்னை நகர போலீஸ் கமிஷ்னர் தேவராம் தலைமையிலான குழு, சுற்றி வளைத்து கைது செய்து, சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்!
 
 இவ்வாறு கொண்டுவரப்பட்ட பிரபாகரன் உள்ளிட்ட அனைவரையும், எட்டு கோணங்களில் போலீசார் புகைப்படம் எடுத்தனர்!

 அடுத்த நாள் அதிகாலை, இந்திய ராணுவ விமானத்தில் பிராபகரன், கிட்டு, மாத்தையன் உள்ளிட்ட அனைவரும் பாதுகாப்பாக ஏற்றப்பட்டு, சிங்கள ராணுவத்திடம் சிக்கிக்கொள்ளாதவாறு, இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்!

•  1982ல்  பாண்டி பஜார் போலீஸ் ஸ்டேஷன், சென்னை மத்தியக் குற்றப் பரிவு இரண்டிலும் பதிவு செய்யப்பட்ட பிரபாகரனின் கை விரல் ரேகைப் பதிவுகளும் .......

•   1986 ல் சென்னை போலீஸ் கமிஷனர் தேவாரம் எடுத்த எட்டுக் கோணங்களிலான புகைப்படமும்..... 

     தமிழகக் க்யூ பிராஞ்ச் போலீசாரிடம் அந்தந்த கால கட்டங்களில் ஒப்படைக்கப்பட்டு, பாதுகாக்கப்படுகிறது!

     தற்போது க்யூ பிராஞ்ச் ஐஜி - சங்கர் ஜூவால்!
                     

•  சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்றது ஒரிஜினல் பிரபாகரன்தானா என்பதை உறுதி செய்துகொள்ள, இந்திய அரசின் வெளிநாட்டு உளவுப்பிரிவான சுரூயுறு  பிரதமர் அலுவலகக் கட்டளைப்படி, முயற்சிகளை மேற்கொண்டது!  

• சுரூயுற அமைப்பின் தென்னிந்திய பகுதிக்கான இணை-டைரக்டர் விஜயசங்கர். இவர், கேரளாவைச் சேர்ந்தவர். இலங்கை - இந்தியா பிரச்னைகளை இவர்தான், மேற்கொண்டுள்ளார்!. இவரது அலுவலகம், சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் ஒரு பங்களாவில், கமுக்கமாக செயல்படுகிறது! பங்களா வாடகை, மாதம் ரூ. 3 லட்சம்!

•  சுரூயுறு இணை- டைரக்டர் விஜயசங்கர், தமிழக 'க்யூ' பிராஞ்ச் ஐஜி. சங்கர் ஜூவாலை மே 18ம் தேதி, இரவு தனது சென்னை அலுவலகத்திற்கு வரவழைத்து, 1982ல் சென்னை போலீசாரால் எடுக்கப்பட்ட பிரபாகரனின் கை விரல் ரேகைகளின் பிரதியையும், 1986ல் எட்டுக் கோணங்களில் சென்னை போலீஸ் கமிஷ்னர் தேவாரத்தால் எடுக்கப்பட்ட பிரபாகரனின் புகைப்பட் பிரதிகளையும் பெற்றார்!

• பிரபாகரன் தொடர்பான இந்த ஆவணங்களைப் பெற்ற விஜயசங்கர், தனி விமானத்தில் தனது அலுவலகத்துடன் இணைந்த தடய அறிவியல் நிபுணர்களுடன் இலங்கைக்குப் பறந்து சென்றார்!
  
   இலங்கையின் ராணுவ தளபதி பொன்சேகாவை,  மே 19ம் தேதி இரவு நேரில் சந்தித்தார்!  சிங்கள இராணுவம் கொன்றுவிட்டதாகக் கூறும் பிரபாகரன் தொடர்பான கை விரல் ரேகைகளின் பிரதிகளைப் பெற்று, பொன்சேகா முன்னிலையிலேயே தன் வசம் உள்ள - தமிழக 'க்யூ' பிராஞ்ச் ஐ.ஜி கொடுத்த பிராபகரனின் கை விரல் ரேகைகளை தடய அறிவியல் நிபுணர்கள் துணையோடு ஒப்பிட்டுப் பார்த்தார்! அதிர்ச்சி! இரண்டு ரேகைகளும் ஒரே மாதிரியாக இல்லாததுடன், ஏராளமான வேறுபாடுகளுடன் இருந்தது! அங்க- அடையாளங்களும் ஒத்துப்போகவில்லை!

•  இந்திய அரசின் வெளிநாட்டு உளவுப் பிரிவான சுரூயுற அமைப்பின் தென்னிந்திய இணை- டைரக்டர் விஜயசங்கரும் உடன் சென்ற தடய அறிவியல் நிபுணர்களும், இலங்கை அரசு ஒரு மகா மோசடியை செய்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, இந்தியா திரும்பினர்!

•  இது தொடர்பான விரிவான அறிக்கையை 'ரா' டைரக்டர் கே.சி. வர்மா வழியாக, இந்திய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அனுப்பி வைத்தனர்!

•  இந்த முழு விவரங்கள், தமிழக முதல்வர் கலைஞருக்கு பிரதமர் அலுவலகம் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது!

•   கொல்லப்பட்டது மாவீரன் பிரபாகரன் அல்ல என்பது நிரூபணமாகியுள்ளது! 
 
 
நன்றி:நெற்றிக்கண்
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails