Thursday, July 2, 2009

மும்பையில் அரபிக் கடலின் மீதான பாலம் திறப்பு

 

 

மும்பையின் மைய வணிகப் பகுதியை நகரின் பொதுமக்கள் குடியிருக்கும் புறநகர்ப் பகுதியுடன் இணைக்கும் வகையில் அரபிக் கடலின் குறுக்காக 4.7 கிலோ மீட்டர் நீளமான பாலம் ஒன்றை மும்பை நகர நிர்வாகம் திறந்துள்ளது.

8 வழி விரைவுப் பாதையை கொண்ட இந்த பாலம், நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன், பயணிகளின் பயண நேரத்தையும் குறைக்கும்.

அரச நிர்வாகத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள், மற்றும் உள்ளூர் வாசிகள் மீதான இதன் தாக்கம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த கரிசனை ஆகியவை காரணமாக எழுந்த எதிர்ப்புக்களால், திட்டமிடப்பட்டதை விட கால தாமதமாக இந்த 300 மில்லிய டாலர்கள் பெறுமதியான பாலத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டது.

21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் முன்னேற்றத்தை இந்த பாலம் காண்பிப்பதாக அதனை வடிவமைத்தவர்கள் விபரிக்கின்றனர்.

ஆனால், முக்கியமான புதிய உட்கட்டமைப்பை விநியோககிப்பதில் எந்த அளவுக்கு அரசாங்க பணியாளர்கள் செயற்திறனற்று காணப்படுகிறார்கள் என்பதையே இதன் தாமதம் காண்பிப்பதாக, அதன் விமர்சகரகள் கூறுகிறார்கள்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails