Wednesday, July 1, 2009

விடுதலைப்புலிகள் புதைத்து வைத்த ஏவுகணை -பீரங்கிகள் மீட்பு !!

 

 
இலங்கையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதியில் இருந்து விடுதலைப்புலிகள் வெளியேறிய பிறகு அந்த பகுதிகளில் ஆயுதங்கள் ஏதும் இருக்கின்றதா என்று இலங்கை ராணுவம் தேடி வருகிறது.


இந்நிலையில்,   தேடலின் போது விடுதலைப்புலிகளால் புதைத்துவைக்கப்பட்ட ஏராளமான ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ராணுவத்தினர் கூறியுள்ளனர்.

புதுக்குடிபாறை அருகே ஒரு இடத்தில் பெரிய கப்பல்களை தகர்க்கும் சக்தியுள்ள 2 ஏவுகணைகள் மற்றும் அதை ஏவும் லாஞ்சர்களை விடுதலைப்புலிகள் புதைத்து வைத்திருந்ததுகண்டு பிடிக்கப்பட்டுள்ளது.   அவை 12 அடி ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டு இருந்தது. பாலிதீன் கவர்களில் சுற்றி வைத்துள்ளனர்.
 
அதில் ஏவுகணை 26 அடி நீளமும், 5 அடி 7 அங்குலம் சுற்றளவும் இருந்தது. ஏவுகணை லாஞ்சர் 28 அடி நீளமும் 5 அடி 10 அங்குலம் சுற்றளவும் இருந்தன. இவற்றுடன் தண்ணீருக்குள் கப்பலை தகர்க்கக்கூடிய 3 ராட்சத குண்டுகளும் புதைத்து வைக்கப்பட்டு இருந்தன.
 
இன்னொரு இடத்தில் சக்கரங்கள் அகற்றப்பட்ட பீரங்கி வண்டி ஒன்று புதைக்கப்பட்டு இருந்தது. இவற்றுடன் மண்ணில் புதைத்து வைத்து இருந்த 9 பீரங்கிகள் மற்றும் ஏராளமான குண்டுகளை கைப்பற்றி உள்ளனர்.
 
புதுக்குடியிருப்பு, விசுவமடு, அனந்தபுரம், வெள்ளமுல்லி வாய்க்கால் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் ஆயுதங்கள் சிக்கியதாகவும் ராணுவத்தினர் கூறியுள்ளார்கள்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails