Sunday, September 28, 2008

சீன விண்வெளிவீரர்கள் பூமிக்கு திரும்பினார்கள்

 


பீஜிங், செப்.29-

சீன விண்வெளி வீரர்கள் 3 பேரும் சீன விண்கலம் ஷென்ஷூ-7ல் விண்வெளியில் பறந்தனர். அந்த விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையில் பூமியை சுற்றி வந்தது. அப்போது விண்வெளி வீரர் ஜாய் ஜிகாங் விண்வெளியில் நடந்தார். அமெரிக்கா, ரஷியாவுக்கு பிறகு விண்வெளியில் நடந்து சாதனை படைத்தது சீன வீரர்கள் தான்.

அவர்கள் நேற்று 5.40 மணிக்கு பூமிக்கு திரும்பினார்கள். உள் மங்கோலியாவில் உள்ள பகுதியில் அவர்கள் தரை இறங்கினார்கள். பூமிக்கு திரும்புவதற்கான வாகனம் பூமியின் வளி மண்டலத்தில் நுழைந்த 3-வது நிமிடத்தில் அவர்கள் அதில் இருந்து வெளியே வந்து பாரசூட்டில் கீழே இறங்கினார்கள். பூமிக்கு 50 கி.மீ உயரத்தில் பாராசூட் விரிந்தது. அது புல் வெளியில் இறங்கியது. அவர்களை தேடுவதற்காக ஹெலிகாப்டரும், மீட்புக்குழுவினரும் தயாராக இருந்த இடத்துக்கு அருகே அவர்கள் இறங்கினார்கள். அவர்கள் பத்திரமாக தரை இறங்கியதை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தனர்.

 

http://www.dailythanthi.com/article.asp?NewsID=441572&disdate=9/29/2008

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails