Thursday, September 18, 2008

ரஷியாவில் 4 சிறுவர்களை கொன்று சமைத்து சாப்பிட்ட கொடூரம்

ரஷியாவில் 4 சிறுவர்களை கொன்று சமைத்து சாப்பிட்ட கொடூரம்
4 சிறுவர்கள், சிறுமிகளை கத்தியால் குத்தி கொன்று அவர்கள் உடலை சமைத்து சாப்பிட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.இந்த கொடுமை ரஷியாவில் நடந்துள்ளது. அங்குள்ள குக்கிராமத்தில் ஒரு கும்பல் அங்குள்ள சிறுவர், சிறுமிகளை ஆசை காட்டி தனி இடத்துக்கு அழைத்துச் சென்றது.

ஒரு குடிசையில் அந்த சிறுவர், சிறுமிகளை தங்க வைத்து அவர்களுக்கு மது பானங்களை கொடுத்து மயங்க வைத்தனர்.

பிறகு 3 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவனை அந்த கும்பல் சரமாரியாக கத்தியால் குத்தி கொன்றனர். ஒவ்வொருவருக்கும் 666 தடவை கத்திக் குத்து விழுந்தது.

பிறகு அவர்களது கை, கால்களை துண்டு துண்டாக வெட்டி தீயில் வறுத்து அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சாப்பிட்டனர்.

சாத்தானுக்கு பூஜை. காணிக்கை செலுத்தவதாக கூறி இந்த கொடூர செயலில் அவர்கள் ஈடுபட்டனர். கொல்லப்பட்ட 4 சிறுவர்கள் 10 வயது நிரம்பியவர்கள். இது தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails