Friday, September 26, 2008

பயங்கரவாதிகளுக்கு துபாய் தொடர்பு

 
 
lankasri.comடெல்லியில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் கைது செய்யப்பட்டுள்ள முகமது சயீப் மற்றும் இதர பயங்கரவாதிகளுக்கு துபாயுடன் தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.இவர்கள் ஹவாலா மோசடியிலும் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளதாக உளவு அமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த பயங்கரவாதிகளுக்கு தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

துபாயில் தங்களுக்கு நெருக்கமானவர்களுடன் இணைந்து ஹவாலா மோசடியில் ஈடுபட்டதன் மூலமாகவே அவர்கள் தங்களது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தேவையான பணத்தை திரட்டி வந்ததாக அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails