Thursday, September 11, 2008

ஐதராபாத்தில் மீண்டும் குண்டு வெடிக்கும்; இ-மெயிலில் அல்கொய்தாமிரட்டல்

 
 
ஆந்திர மாநிலம் ஐதரா பாத்தில் உள்ள தனியார் தெலுங்கு டி.வி. ஒன்றுக்கு நேற்று மாலை அல்கொய்தா இயக்கம் என்ற பெயரில் இ- மெயில் ஒன்று வந்தது. அதில் ஐதராபாத்தில் மீண்டும் பல இடங்களில் குண்டு வெடிப்பை நிகழ்த்த திட்டமிட்டுள்ளோம்.

பெரும்பாலும் இந்த குண்டு வெடிப்புகள் அனைத்தும் விநாயகர் சிலை ஊர்வலத்தில் தான் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த இ-மெயிலைப்பார்த்ததும் தெலுங்கு டி.வி. ஊழியர்கள் பீதி அடைந்தனர்.

உடனே அவர்கள் இது பற்றி ஐதராபாத் போலீஸ் கமிஷனர் பிரசாதராவை சந் தித்து இ-மெயில் மிரட்டல் பற்றி கூறினார்கள்.

இதையடுத்து ஐதராபாத்தில் முக்கிய இடங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள், தியேட்டர், பூங்கா, ஜவுளிக்கடைகள் போன்ற பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர். நகரின் முக்கிய பகுதிகளில் போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails