Thursday, April 1, 2010

சானியா பாகிஸ்தானுக்காக விளையாடுவார் ?


 

சானியா பாகிஸ்தானுக்காக விளையாட வேண்டும்: பாக். டென்னிஸ் சம்மேளனம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்குடனான திருமணத்துக்குப் பின் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பாகிஸ்தானுக்காக விளையாட வேண்டும் என அந்நாட்டின் டென்னிஸ் சம்மேளனத் தலைவர் திலவர் அப்பாஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாதில் ஏப்ரல் 15 ந் தேதி நடைபெறும் திருமணத்துக்குப் பின் சானியாவும், சோயப் மாலிக்கும் துபையில் வசிக்கத் திட்டமிட்டுள்ளனர். திருமணத்துக்குப் பின்னரும் இந்தியா சார்பில் விளையாட சானியா விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சோயப் மாலிக்கை சானியா திருமணம் செய்யவிருப்பது பாகிஸ்தான் டென்னிஸ் ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கும் தகவல் என்றும். பாகிஸ்தான் குடிமகளாகி எதிர்காலத்தில் அவர் தங்களுக்காக விளையாடுவார் என நம்புவதாகவும் திலவார் அப்பாஸ் தெரிவித்தார்.

ஆசியப் பெண்கள் பாரம்பரியமாக தங்கள் கணவரைப் பின்பற்றுவதால் சானியாவும் ஒருநாள் பாகிஸ்தானுக்காக விளையாடுவார் என அப்பாஸ் நம்பிக்கை தெரிவித்தார்


source:nakkheeran


--
www.thamilislam.co.cc
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails