Monday, April 12, 2010

நாடுகடந்த அரசின் தேர்தல் குறித்த விபரங்கள்

 

 

நாடு கடந்த அரசாங்கத்தின் தேர்தல் விபரங்கள், நாடுவாரியாக !





2010 மே 2ம் திகதி பிரான்சில் நாடுகடந்த கடந்த தமிழீழ அரசினதும், தமிழீழ மக்கள் பேரவையினதும் சனநாயகத்தேர்தல்

நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலும், பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் தேசிய அரசியல் கட்டமைப்புக்கான தேர்தலும், எதிர் வரும் மே மாதம் 2ம் திகதி பிரான்சு நாடு தழுவிய ரீதியில் நடைபெறுகின்றது.

இன்றைய புதிய உலகமாற்றத்தில் தமிழீழ மக்களின் விடுதலைப்போராட்டத்தை பயங்கரவாதமாக்கி எமது மக்களின் விடுதலைப்போராட்டத்தை அழித்து ஒரு பெரும் இனப்படுகொலையை செய்ய இடமளித்து உலகத்தில் ஒரு புதிய துயரசரித்திரத்தினை எழுதப்பட்டிருக்கும் இன்றைய நிலையிலும், எமது தாய்நாட்டில் அம்மக்களின் உரிமைகள் யாவும் பறிக்கப்பட்டு அடக்கியாளப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நேரத்திலும,; எமது தேசத்தையும், எமது அரசையும், மக்களையும், மீட்டு எமது தேசத்தை கட்டியெழுப்ப வேண்டியது புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் எங்கள் எல்லோரின் தலையாய கடமையாகும்.

தமிழீழ தேசத்தின் இதயமான வன்னிபெரு நிலப்பரப்பில் தமிழீழ தேசத்தின் நடைமுறையரசு இருந்ததும், அங்கே எமது மக்கள் சுதந்திரமிக்கவர்களாகவும், பாதுகாப்பாகவும், நிம்மதியான வாழ்வையும் வாழ்ந்ததையும், அனுபவித்ததையும், சென்று வந்த எம்மவர்கள் முதல் அந்நிய நாட்டு ராஐதந்திரிகளும் கண்டதும், சொன்னதும் மறைக்க முடியாத மிகப்பெரும் உண்மையும், அதன் வளர்ச்சிக்கு புலம்பெயர்ந்த 

தமிழ்மக்கள் உரமாக இருந்ததும் யாவரும் தெரிந்த செய்தியுமே. 


இன்று அத்தேசம் மானிட உலகில், மனிநேயமிக்கவர்களால் நினைத்துக் கூடப்பார்க்க முடியாத அளவு பூர்விக காலமாக தம் நிலத்தில் வாழ்ந்து வந்த எங்களின் நிலமும், வாழ்வுரிமையும் பறிக்கப்பட்டும், அதற்கப்பால் அவர்களில் பல்லாயிரக்கணக்கானோரின் உயிர்களும் பறிக்கப்பட்டு, அந்த மிகப்பெரும் திட்டமிட்ட 

இனப்படுகொலையின் அடையாளங்களை அழித்து அதற்கு மேல் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி சிங்கள மயமாக்கப்பட்டுக் பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் அதற்கு துணைபோன போன தமிழர்களாக நம் வரலாற்றில் பதிவாகாமல் தமது உறவுகளை மீட்போராகவும், நீதி கேட்போராகவும், அன்றும், இன்றும், என்றும் எமது உறவுகளுக்காக குரல் எழுப்புபவர்களாகவும், தேசத்தை மீட்டு அதைக்கட்டியெழுப்பவர்களாகவும் இருக்கவேண்டும்.

அன்பான தமிழீழ மக்களே!

இன்றைய காலம் எமது கைகளில் இரண்டு பெரும் சக்திகளை உருவாக்கும் கடமை தரப்பட்டிருக்கின்றது. ஒன்று எமது மண்ணில் அழிக்கப்பட்ட எமது அரசை உருவாக்கி உலக அரசியல் மேடையில் இயங்குவதும், (நாடுகடந்த தமிழீழ அரசு) மற்றையது அந்தந்த நாடுகளில் அரசியல் கட்டமைப்புக்களை உருவாக்கி தமிழ்மக்களின் ஏகோபித்த பெருவிருப்பமான தமிழீழ தனியரசினை அங்கீகரிக்கச் செய்யும் (தமிழீழ மக்கள் பேரவை) 




செயற்திட்டங்களில் ஈடுபடுதலாகும். (தமிழீழத்தேசியத்தலைவர் அவர்கள் 2008ம் ஆண்டு மாவீரர்நாள் செய்தியில் தீர்க்கதரிசனமாக சொன்ன செய்தி உலகம் முழுவதும் வாழும் தமிழ்மக்களும், புலம்பெயர்மக்களும் இந்த போராட்டத்தை முன்னெடுத்து கொண்டு செல்ல வேண்டும்) என்றும் அதில் அடுத்த சந்ததியினர் இதில் பங்கு தாரர்களாக மாறவேண்டும் என்றார். இன்று இப்போராட்டம் அடுத்த சந்ததிக்கு சென்று விட்ட நிலையில் எமது அனைத்து சக்திகளையும் ஒண்றினைத்து எமது இனவிடுதலையை மாத்திரம் குறிக்கோளாக கொண்டு செயற்படுவதே இன்றைய காலத்தின் கட்டளையாகும்.

இந்த உண்மையை புரிந்து கொண்டு சளைக்காமல், சலுக்காமல், தொய்யாமல், துவளாமல், கிஞ்சித்தும் அஞ்சாமல் இனத்துரோகத்திற்கும், சுயநலத்திற்கும், துணைபோகாமல், மண்ணை நேசித்து மானமுடன் தன்தாய்மண்ணை முத்தமிட்ட மறவர்களின் வழிவந்தவர்கள் நாங்கள் என்பதை மீண்டும் மீண்டும் உலகிற்கும், எம்மை கருவோடுவேரறுக்க நினைக்கும் சக்திகளுக்கும் எமது தாகம் தமிழீழ தாயகம் என்பதை அரசியல் ரீதியில் உணர்த்துவோம்.

எதிர் வரும் மே 2ம் திகதி புலம்பெயர் தமிழ்மக்களின் மீண்டும்மொரு வரலாற்று பதிவில் உலக அரசியலில் மாபெரும் மக்கள் படையாக சேர்ந்து தமிழீழத்தை நோக்கிச்செல்வோம் உங்கள் பிரதிநிதிகளை நீங்களே தெரிவுசெய்யுங்கள். எமது விடுதலையை ஒன்றாக வென்று எடுப்போம். 


தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்


source:athirvu


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails