Tuesday, April 29, 2008

தமிழர்கள் முஸ்லீமாக மதம் மாறாவிட்டால் அவர்களை கொல்ல வேண்டும்

இணையத்தில் காணும் வீடியோக்களுள் மிக முக்கியமானது இந்த வீடியோ. உண்மையடியான் அவர்கள் இதை கண்டெடுத்து யூட்யூபில் அப்லோட் செய்துள்ளார்.




இதுவரை தமிழ்நாட்டு (மற்றும் இலங்கை தமிழ் பகுதிகளின்) மசூதிகளில் மட்டுமே பேசப்படுபவை, ஈமான் கொண்டவர்கள் தங்களுக்குள்ளாக இஸ்லாமிய மார்க்கத்தின் உண்மையான நெறிமுறைகளைப் பேசிக் கொள்பவை இப்போது இணையம் மூலம் நாமெல்லாம் அறிந்து கொள்ளும் வரையில் பகிரங்கமாக தெரிய வந்துள்ளது.

இங்கே இந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர் தெளிவுபடுத்துவதைப் பாருங்கள் - 'மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை' என்பது abrogated (நீக்கப்பட்ட/அல்லாஹ்வால் பின்னாளில் மாற்றப்பட்ட) போதனை என்பதை தெள்ளத் தெளிவாக முஸ்லீம்களுக்கு எடுத்துக் கூறுகிறார். குர்ஆன் திரும்பத் திரும்ப தெளிவாக இந்துக்களுடனும் (காஃபிர்கள்), கிறித்துவர்கள் யூதர்களுடனும் போரிட வேண்டும் என்று சொல்வதையும், அதில் ஜிஸ்யா கொடுத்தால் அவர்களை உயிருடன் விட்டுவிடவேண்டும் என்ற சலுகை கிறித்துவர்களுக்கும், யூதர்களுக்கும் மட்டுமே என்பதையும் - விக்கிரக ஆராதனையாளர்களுக்கு (முருகனை, மாரியம்மனை, காளியம்மனை, மதுரைவீரனை, கருப்பசாமியை, மாடனை இன்னபிற நாட்டார் தெய்வங்களை வணங்கும் தமிழர்கள் அனைவருமே விக்கிரக ஆராதனையாளர்கள் தாம்) அச்சலுகை கிடையாது அவர்களுக்கெதிராக ஜிஹாத் (அவர்கள் அழித்தொழிக்கப்படும் வரை) என்பதே அல்லாஹ்விடமிருந்து இறுதி இறைத்தூதர், நபிகள் நாயகம் முஹமது அவர்கள் கேட்டுச் சொன்ன உத்தரவு என்பதை தெளிவாக எடுத்துக் கூறுகிறார் இந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்.

இப்போது எனது கேள்வி தமிழ் பதிவர்களுக்கு:


1. நல்லடியார் அவர்களிடம் முன்பு நான் குரான் contextual ஆ, eternal ஆ என்று கேட்டிருந்தேன். அவர் பதில் சொல்லாமல் மழுப்பிவிட்டார். ஏனெனில், இந்த இஸ்லாமிய அறிஞர்[sic] கூறுவது போல அந்தக் காலகட்டத்திற்கு மட்டுமே சொல்லப்பட்ட வசனங்கள் என்று குரானில் இல்லை (அப்படி சொல்லப்பட்டவை abrogated verses, அவற்றை பின்னாளில் அல்லாஹ் நீக்கிவிட்டு எல்லாக்காலத்திற்கும் பொருந்தும் வசனங்களை முஹம்மதுவின் மூலம் ஈமானிகளுக்கு சொல்லி, மார்க்கத்தை முழுமை செய்துவிட்டார்). அப்படி சொல்லியிருந்தால் அதை இன்னமும் தினமும் ஓதிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. காஃபிர்களை கண்டவிடமெல்லாம் வெட்டுங்கள், கொல்லுங்கள், கொள்ளையடியுங்கள், அவர்களது பெண்களையும் குழந்தைகளையும் கவர்ந்து கொள்ளுங்கள் என்ற அல்லாஹ்வின் கட்டளைகள் எல்லாக் காலகட்டத்துக்கும் பொருந்துபவை - அதைத்தான் இந்த அறிஞர் தெளிவுபடுத்தியுள்ளார்.

2. நாட்டார் தெய்வங்களை இந்து மதம் ஊருக்கு வெளியே தள்ளிவைத்துவிட்டது என்று புலம்பும் நமது இடதுசாரி-திராவிட-அறியாஜீவி-தமிழ்மண வலைப்பதிவர்கள், எழுத்தாளர்கள், பின்னூட்ட ஸ்பெஷலிஸ்டுகள் இந்த அறிவிப்பு/விளக்கத்துக்கெதிராக குரல் கொடுப்பார்களா? ஏனெனில், நாட்டார் தெய்வங்களையும், அவற்றை வழிபடுபவர்களையும் அழித்திட வேண்டும் என்பதே இஸ்லாம் சொல்லியுள்ள ஷரீயத் - இறைக்கட்டளை என்று இந்த மார்க்க அறிஞர் தெளிவுபடுத்தியுள்ளார் (இதுதான் உண்மை என்பதை இஸ்லாமிய நாடுகள் எங்கும் பார்க்கவும் முடிகிறது).

3. பா.ராகவன் அவர்கள் ஃபித்னா திரைப்படம் குர்ஆன் வசனங்களை தவறாக மேற்கோள் காட்டுகிறது என்று எழுதியுள்ளார். இப்போது இந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர் அப்படி இல்லை, அந்நிய மதத்தவர்களுக்கு பிடிக்காவிட்டாலும், இதுதான் உண்மை, இதைத்தான் இஸ்லாம் சொல்கிறது என்று சொல்கிறார். இதுவே ஹதீஸ்களின் மூலம் நிரூபனமாவது, இதுவே உலமாக்களின் (இஸ்லாமிய மார்க்க மேதைகள்) ஏகோபித்த கருத்து என்று தமது வாழ்நாள் முழுவதையும் இஸ்லாத்தை படிப்பதையும் ஆய்விலும் செலவிட்ட இந்த அறிஞர் கூறுகிறார். ஒன்று பா.ராகவன் தான் சொல்வதுதான் இஸ்லாம் என்று நிரூபித்து இந்த அறிஞருக்கும், சவுதி போன்ற நாடுகளுக்கும், வஹ்ஹாபிசத்தை பின்பற்றுபவர்களுக்கும் இஸ்லாமே தெரியாது என்று நிருவ வேண்டும் (இந்த அறிஞரை ஸ்பான்சர் செய்திருப்பது சவுதிதான் - அதன் தாவா மையங்கள் மூலம் தான் இப்படிப்பட்ட விஷப்பிரச்சாரம், மங்கிக் கிடக்கும் இஸ்லாமியர்களிடையே சத்தியமார்க்கத்தை பரப்புவதற்காக செய்யப்படுகிறது - இந்த மௌளவி டாக்டர்.அஹ்மத் அஸ்ரப் மன்னர் காலீத் பல்கலைக்கழகம்,அப்ஹா-சவுதி அரேபியாவில் பேராசிரியர்) இந்தியா போன்ற நாடுகள் பாகிஸ்தானைவிட சவுதியையே பயங்கரவாதத்தை பரப்பும் நாடாக பிரகடனம் செய்யக்கோரி மற்ற நாடுகளை அணுக வேண்டும்) அல்லது தனக்கு இஸ்லாம் பற்றி ஒன்றுமே தெரியாது என்ற உண்மையாவது ஒப்புக் கொள்ள வேண்டும்.


யாரும் இதையெல்லாம் செய்யப் போவதில்லை என்பதையும், இதெல்லாம் செவிடர்கள் காதில் ஊதுகிற சங்கு என்பதையும் அறிவேன். இருப்பினும், இத்தகைய விஷயங்களை கண்டுவிட்டு வாய்மூடி அமைதியாய் இருக்க முடியவில்லை, என்ன செய்வது - அல்லாஹ் என்னைப் போன்றவர்களின் இதயத்தையும், உணர்வுகளையும், மனதையும் மூடாமல் விட்டுவிட்டார்! இல்லையென்றால், இந்த மார்க்க மேதைகள் போன்று, அதை செவிமடுக்கும் மூடர்கள் போன்று, அதைக் கண்டு அமைதியாய் இருக்கும் இஸ்லாமிய சமூகத்தைப் போன்று, அதைக் கண்டும் காணாதது போன்று இருக்கும் நமது அறியாஜீவி-கம்யூனிஸ்ட்-திராவிட ஜால்ராக்களைப் போன்று நானும் இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன். அப்படி இருந்திருந்தால் நல்லதோ என்று அடிக்கடி தோன்றுகிறது. அறியாமையே பேரின்பம் (ஜிஹாத் நமது கழுத்துக்கு வரும் வரை) என்று சொன்னவர்களை பாராட்டவும் தோன்றுகிறது.


நேச குமார்.


***


சம்பந்தப்பட்ட உண்மையடியானின் பதிவு:
 
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails