Monday, April 28, 2008

கடி ஜோக் படிக்கனும்னா மட்டும் கிளிக் பண்ணுங்க

1. ""நிறைய புக்ஸ் படிச்சு நம்ம அறிவை நாம பெருக்கணும்.''

""எத்தனையால் பெருக்கணும் சார்?''

சி.பி.செந்தில்குமார், சென்னிமலை.

2. ""பாம்பிற்கும், ஷாம்பிற்கும் என்ன வித்தியாசம்?''

""ஷாம்பை தலையில தேய்ச்சா நுரை வரும்; பாம்பு கையில கடிச்சா வாயில நுரை வரும்.''

கே.அருள், முனியங்குறிச்சி.

*3. ""அவர் ஏன் பரட்டை தலையோட இருக்காரு?''

""எண்ணெய் சேர்க்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காராம்.''

ஆர்.சரவணன், 443, ஏ.27, மணிநகரம், ரைஸ்மில் அருகில், கம்பம்-625 516.

4. ""அரசவைப் புலவரை ஏன் அப்பதவியில் இருந்து மன்னர் நீக்கி விட்டார்?''

""ஒரே பாடலை இரு முறை பாடி பரிசை வாங்கியது தெரிந்து விட்டதாம்.''

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

*5. ""உங்க ஆசிரியர் ஒரு மாதத்தில் சுமாராக எத்தனைப் பாடங்கள் நடத்துவார்?''

""எல்லாப் பாடங்களையும் சுமாராய்த்தான் நடத்துவார்.''

எம்.சரவணன், வீரணம், சாத்தனூர் அஞ்சல்,

தண்டராம்பட்டு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்-606 706.

6. ""வர்ற ஞாயிறுதான் Black Sunday-யா? யார் சொன்னது உனக்கு?''

""ஸ்பெஷல் கிளாஸ் வச்சிருக்கீங்களே சார்!''
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails