Friday, March 5, 2010

வலி இல்லாமல் போடும் மருந்து ஊசி கண்டுபிடிப்பு:

வலி இல்லாமல் போடும் மருந்து ஊசி கண்டுபிடிப்பு: ஜப்பான் விஞ்ஞானி சாதனை
வலி இல்லாமல் போடும்    மருந்து ஊசி கண்டுபிடிப்பு:     ஜப்பான் விஞ்ஞானி சாதனை
லண்டன், மார்ச். 5-
 
மனிதர்களின் நோய் குணம் அடைய உடலில் ஊசி மருந்து செலுத்தப்படுகிறது. இதனால் வலி ஏற்படும் என்பதால் ஊசி போட்டுக் கொள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அச்சப்படுகின்றனர்.
 
இந்த அச்சத்தை போக்கி வலி இல்லாத வகையில் போடும் மருந்து ஊசியை ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் கண்டு பிடித்துள்ளார்.
 
இந்த ஊசிகள் கரையக்கூடிய பாலிமர் இழைகளால் தயாரிக்கப்பட்டது. இதை உடலில் குத்துவதன் மூலம் தோலின் அடிப்பகுதி சேதமடையாது. வலி ஏற்படாது.
 
இந்த மைக்ரோ ஊசிகள் 0.5 மி.மீட்டர் நீளமும், 0.3 மி.மீட்டர் அகலமும் கொண்டது. இந்த ஊசி சோதனை செய்து பார்க்கப்பட்டது.

source:maalaimalar


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails