Tuesday, March 2, 2010

கரன்திகாருடைய புஸ்தகத்திற்கு எதிராக முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம்.

க்ரன்திகாருடைய புஸ்தகத்திற்கு எதிராக முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம்.

 


 
     380 முதல் பாகம் மற்றும் 410 இரண்டாம் பாகம் புத்தகங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    
      புத்தகம் ஒற்றுமையை குலைப்பதாக உள்ளது என்கிறார். எஸ்.பி. 



கம்மம். உலகின் மீது பிறை நிலா .Crescent over the world -  is boon silent  Holocaust, authored by Macha Laxmaiah alias Krantikar , a civil rights activist,   வியாழனன்று பெரும் கலகத்தை விளைவித்தது. 


  நூற்றுக்கணக்கான முஸ்லீம் இளைஞர்கள் தங்களுடைய மத நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் பாதிக்கக் கூடிய விதத்தில் புத்தகத்தின் கருத்துக்கள் இருப்பதாகக் கூறி போரட்டத்தில் ஈடுபட்டனர்.  

 அவர்கள் கூறியதாவது, அந்த புத்தகத்தில் தடைசெய்யப்பட்ட சல்மான் ருஷ்டியின் சாத்தானி;ன் கவிதைகள் மற்றும் தஸ்லிமா நஸ்ரீனின் லஜ்ஜா புத்தகத்திலிருந்தும் கருத்துக்கள் எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் டேனிஷால் வரையப்பட்ட கேலிச்சித்திரங்களும் இடம் பெற்றிருக்கிறது. 

 முதல் பாகத்தின் 380 புத்தகங்களையும் இரண்டாம் பாகத்தின் 410 புத்தகங்களையும் நகரின் பல்வேறு பகுதிகளில் சோதனையிட்டதில் கைப்பற்றினர். ஆசிரியரையும் கைது செய்துள்ளனர். ஏற்கனவே புத்தகங்கள் அனுப்ப பட்ட இடங்களில் தேடுதல் பணிக்காக குழுக்கள் பிரித்தனுப்ப பட்டுள்ளது. 

 சிறப்பு படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 

 மற்ற நகரங்களிலும் ஹைதரபாத்திலும் உள்ள போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். 
  
 ஆசிரியரையும் அவருடைய இரண்டு பாகங்கள் வெளிவர நிதி உதவிசெய்த சில மருத்துவர்கள் மற்றும் கல்விநிறுவனங்கள் மீது நடவடிக்ககை எடுக்கக் கோரி இஸ்லாமிய அமைப்புகள் விடுத்த கோரிக்கைகளினால் நகரில் எந்த விருப்பமற்ற சம்பவங்களும் நடைபெறாமல் இருக்கு சிறப்புப் படைகள் பணியமர்த்தப்பட்டுள்ளது. 
 
 கம்மம் போலீஸ் சூப்பிரன்டென்ட் அனில் குமார் கூறுகையில் புத்தக வினியோகம் சமூக ஒற்றுமைக்கு ஒரு அச்சுறுத்தலாக உள்ளது. சட்ட அமுலாக்கத்தின் படி நிலைமைக்கு ஏற்றவாறு செயல்பட்டு சட்டத்தையும் உத்திரவையும் பாதுகாக்க வேண்டிய கடமை போலீசாருக்கு உள்ளது. 

 நியாயமான கருத்துக்களின் அடிப்படையில் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. 'அந்த புஸ்தகத்தில் சில எதிர்ப்பான கருத்துக்கள் இடம் பெற்றிருப்தாக நாங்களும் உணர்கிறோம்." என்று அவர் கூறினார்.  

                                             நன்றி: த ஹிந்து ( 26. 02. 2010) 


source:http://www.unmaiadiyann.blogspot.com/
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails