Thursday, March 11, 2010

இந்தியாவை நம்பியது மிகப் பெரும் தவறு


ஈழத்தமிழர்கள் உரிமையை வென்றெடுக்க இந்தியாவை நம்பியது மிகப் பெரும் தவறு: இந்திய பேராசிரியர் தெரிவிப்பு

இலங்கைத் தமிழர் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு இந்தியாவை நம்பியமை அவர்கள் செய்த மிகப் பெரும் தவறாகும் என்று இந்தியப் பேராசிரியர் அ.மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் 'பகை மறப்பு' என்ற தலைப்பிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதில் ஒரு வாரகால விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரபல நூலாசிரியரும் பகுத்தறிவுவாத இயக்க சிந்தனையாளருமான பேராசிரியர் மார்க்ஸ் சிறப்புரை நிகழ்த்தினார்.

தமிழ்த் தேசியம், இந்தியாவின் பங்களிப்பு ஆகியன குறித்து இங்கு கேள்வி எழுப்பப்பட்டது. இந்தியா மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். எனினும் இந்தியா துரோகம் செய்து விட்டது என்று பார்வையாளர்களில் ஒருவர் கருத்து வெளியிட்டார்.

அச்சந்தர்ப்பத்திலேயே பேராசிரியர் இந்தியாவை நம்பியது தமிழ் மக்கள் செய்த தவறு என்பதை நாம் தமிழ் நாட்டிலும் கூட சொல்லி வந்திருக்கின்றோம் என்று பதிலளித்தார்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பது கூட பல்வேறு கார ணங்களின் காரணமாக வெறும் வார்த்தையளவில் மாத்திரம் காணப் படுகின்றது என்றும் பேராசிரியர் மார்க்ஸ் மேலும் தெரிவித்தார்


source:puthinamnews

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails