Monday, March 8, 2010

நான் அவன் இல்லை - நித்யானந்தா பரபரப்பு பேட்டி


   

Swine Flu

சட்ட ரீதியாக நான் எந்த தவறும் செய்யவில்லை என்று சர்ச்சையில் சிக்கி தலைமறைவாகி உள்ள சாமியார் நித்யானந்தா கூறியுள்ளார்.பிரபல சாமியார் நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சி சமீபத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகள் வெளியானதையடுத்து, 

இந்து மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடெங்கிலும் ஆர்ப்பாட்டங்களும், உருவப்படங்கள் எரிப்பும் நித்யானந்தாவின் மீதான கோபம் வெளிப்படுகின்றன. சென்னை போலீஸ் கமிஷனரிடமும், கோவை மாநகர காவல்துறையிடமும் நித்யானந்தாவை கைது செய்யக் கோரி புகார் கொடுப்பட்டுள்ளது. 

நடிகை ரஞ்சிதாவும், நித்யானந்தா சாமியாரும் ஒன்றாக இருப்பது போன்ற படங்களை நான் தான் எடுத்தேன் என்று சாமியாரின் சீடர் நித்ய தர்மானந்தா (எ) லெனின் சென்னை போலீஸ் கமிஷனரிடம் கூறியுள்ளார். மேலும் அந்த வீடியோ பதிவுகளை ஒப்படைத்து தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் காவல்துறையில் லெனின் புகார் கொடுத்துள்ளார். இதனையெடுத்து லெனின் போலிசாரின் நேரடி பாதுகாப்பில் உள்ளார்.

சாமியார் நித்யானந்தா, தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக லெனின் தனது புகாரில் தெரிவித்துள்ளதை அடுத்து, கொலை மிரட்டல் வழக்கை மட்டும் தமிழக போலீஸ் விசாரிக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சாமியார் நித்யானந்தா மீதான பாலியல், கூட்டுசதி, மோசடி உள்ளிட்ட 5 வழக்குகள் கர்நாடக போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாமியார் நித்யானந்தா, நான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், அந்த வீடியோ பதிவுகள் போலீயானது என்றும் சாமியார் பேட்டி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, 

உங்கள் எல்லோருக்கும் ஒரு விஷயத்தை ஆணித்தரமாக, ஆழமாக சொல்ல விரும்புகின்றேன். சட்ட ரீதியாக எந்த தவறையும் நானோ, தியான பீடமோ செய்யவில்லை. நாங்கள் இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் வதந்திகள் சார்ந்த எல்லாவிதமான செய்திகளையும், உண்மைகளையும் திரட்ட முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். சில நாட்களில் நாங்கள் செய்திகள் அனைத்தையும் சேகரித்தப் பிறகு, எல்லா உண்மைகளையும் உங்கள் முன் விளக்குகிறேன் என்று சாமியார் நித்தியானந்த பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். ஆனால் அந்த விடியோ எங்கு எடுக்கப்பட்டது, மற்றும் அவர் எங்கு தலைமறைவாகியுள்ளார் என்பது தெரியவில்லை.

Nithyananda's First Public Statement : http://www.dinakaran.com/Nithyananda-Public-Statement.asp


source:dinakaran


--
www.thamilislam.co.cc

1 comment:

Subu said...

ஆக மொத்தம் குடும்பத்தான் மட்டுமில்லை, சன்யாசிக்கு கூட பெண்களால் தான் அழிவு போலக்கீது !! என்னாவோ போ

சி டி யில இருப்பது சாமி நித்யானந்தர் தானான்னே தெரியெல்லை

அப்படியே அவர்தான்னு சொன்னானும் சாமியார் தப்பு பண்ணுனார்னு கோர்ட்டில நிரூபணம் ஆயிடிச்சா ?

சாமியார் என்னா தப்பு பண்ணிட்டார்னு அவரோட ஆஸ்ரமத்துக்கெல்லாம் போலீஸ் ரெய்டோ தெரியெல்லை. பக்தர்களை காலி பண்ண சொல்லுறாங்களாம் போலீஸ்...ஐயோ பாவம் சாமியார்...அதைவிடப்பாவம் பக்தர்களும் சிப்பந்திகளும்

சாமியார் பண்ணினது ஆசாரத்துக்கோ,சன்யாஸ்ரம தர்மத்துக்கோ எதிர்ன்னு சொன்னா அது அவர் பாடு அவர் பக்தர்கள் பாடு... போலீஸுக்கு என்னாய்யா வந்திச்சு ? போலீஸ் என்னா இந்து சாஸ்திர நிபுணர்களா ? இந்து மதக் காவலர்களா ?

இணக்கத்துடன் பாலுறவு தப்புன்னா பலர் வீட்டுக்கும் போலீஸ் ரெயிடு போக வேண்டி வருமே !!

இந்தக்கூத்தில நாத்திகக் கும்பலோட பங்கென்னான்னு தெரியெல்லை

http://manakkan.blogspot.com/2010/03/blog-post.html

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails