Saturday, July 10, 2010

ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை

 
 

புதுடில்லி:சுப்ரீம் கோர்ட்டில் நேற்று ஒரே நாளில், 75 தீர்ப்புகளை வழங்கி நீதிபதி சுதந்திரகுமார், உலக சாதனை படைத்துள்ளார்.மும்பை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதியானவர் சுதந்திரகுமார். இவர், மும்பை ஐகோர்ட்டில் பணியாற்றிய போது, ஒரே நாளில் 80க்கும் அதிகமான தீர்ப்புகளை கூறி ஏற்கனவே சாதனை படைத்துள்ளார். சுப்ரீம் கோர்ட் நீதிபதியான பின்பும் இந்த சாதனையை அவர் தொடர்ந்துள்ளார்.


நேற்று இவரிடம் 77 வழக்குகள் வந்தன. இதில், 75 வழக்குகளில் தீர்ப்பு கூறி, உலக சாதனை படைத்துள்ளார். விரைவில் இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற உள்ளது. மீதமுள்ள இரண்டு வழக்குகளில் நீதிபதி பி.எஸ்.சவுகான் தீர்ப்பு கூறினார்.உலகில் வேறெந்த சுப்ரீம் கோர்ட்டும் ஒரே நாளில் 75 தீர்ப்புகளை வழங்கியதில்லை.சமீபத்தில் ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி அர்ஜித் பசாயத், தான் ஓய்வு பெறும் கடைசி பணி நாளில், 25 தீர்ப்புகளை கூறி சாதனை செய்தார். தற்போது இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.


source:dinamalar


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails