Wednesday, April 9, 2008

முஸ்லீம்கள், முந்தைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நிராகரிக்கிறார்கள், அவ்வசனங்கள் திருத்தப்பட்டன என்று வாதாடுகிறார்கள்

மற்றவர்களை இஸ்லாமியர்களாக மாற்ற விரும்பும் முஸ்லீம்கள், "ஏன் உண்மையை அறிய விரும்பும் மனிதர்கள், இஸ்லாமை நம்புவதில்லை?" என்ற கேள்வியின் பதிலை தெரிந்துக்கொள்ள விரும்பக்கூடும். இதற்கு சில முக்கியமான காரணங்கள் உண்டு, இந்த கட்டுரையில் அந்த காரணங்களை ஒவ்வொன்றாக காணலாம். இந்த காரணங்களில் ஒன்று உண்மையாக இருந்தாலும், அது இஸ்லாம் உண்மையான மார்க்கம் இல்லை என்பதை தெளிவாக்கிவிடும். இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்ட தொடுப்புக்கள் ஒவ்வொரு காரணத்தையும் தெளிவாக விளக்கும்.

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டு இருக்கும் பட்டியல், குற்றப்படுத்தும் தோரணையில் அல்லாமல், சொல்லப்படும் எல்லா காரணங்களுக்கும் தேவையான எல்லா ஆதாரங்களையும் தருகிறது. இந்தக் கட்டுரை சில காரணங்களை சுருக்கமாக‌ விளக்குகிறது, முழுவிவரங்களையும் தெரிந்துக்கொள்ள கொடுக்கப்பட்ட தொடுப்புக்களில் சென்று படிக்கவும்.



இஸ்லாம் முந்தைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நிராகரிக்கிறது

ISLAM DENIES WORDS OF PREVIOUS PROPHETS


1. முஸ்லீம்கள், முந்தைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நிராகரிக்கிறார்கள், அவ்வசனங்கள் திருத்தப்பட்டன என்று வாதாடுகிறார்கள். இயேசு முந்தைய வேத சட்டத்தையும், இன்ஜீலையும்(சுவிசேஷத்தையும்) உண்மைய்ப்படுத்தக் கூடியவராக இருந்தார் என்று குர்‍ஆனில் சூரா 5:46-48 சொல்கிறது. மற்றும் சவக்கடல்(Dead Sea Scrolls) பகுதியில் கிடைத்த பிரதிகளில் இயேசுவின் காலத்தில் இருந்த பழைய ஏற்பாட்டு பிரதிகள் கூட இருந்தன. படிக்க‌: http://www.muslimhope.com/DeadSeaScrolls.htm

மோசே மூலமாக கொடுத்த தன் சட்டத்தை பாதுகாக்கவும், இயேசுவிற்கு கொடுத்த இன்ஜீலையும் பாதுகாக்க அல்லாவினால் முடியவில்லையானால், குர்‍ஆனில் கொடுத்த அவரது வசனங்களையும் பாதுகாக்க அல்லாவினால் முடியாது. குர்‍ஆனுக்கு முன் இறக்கிய தன் வேதத்தையும் அல்லா பாதுகாத்து இருக்கவேண்டும். படிக்க: http://www.biblequery.org/History/ChurchHistory/WhatEarlyChristiansTaught.htm
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails