Monday, October 11, 2010

சச்சின் அபாரம்:ஆஸ்., எதிரான டெஸ்ட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சச்சின் தெண்டுல்கர் 150 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.


இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. மொகாலியில் நடந்த முதல் டெஸ்டில், வென்ற இந்திய அணி 1 0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் பெங்களூருவில் நடக்கிறது. 


இரண்டாவது நாள் ஆட்டத்தில் சச்சின் 25 ரன்கள் எடுத்த நிலையில், ஹாரிட்ஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டி, சர்வதேச டெஸ்ட் அரங்கில் 14 ஆயிரம் ரன்களை கடந்து புதிய உலக சாதனை படைத்தார். 


இந்நிலையில் இன்று 3வது ஆட்டத்தின் போது தொடர்ந்து ஆடிய சச்சின் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் தனது 49 வது சதத்தை நிறைவு செய்தார். மேலும் சச்சின் 150 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்.


171வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ள சச்னின் தெண்டுல்கர் அபாரமாக ஆடி தனது 49 சதத்தைப் பூர்த்தி செய்துள்ளா


source:nakkeeran


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails