Wednesday, March 4, 2009

வன்னியின் பல பகுதிகளிலும் ஊடுறுவல்,கரும்புலித்தாக்குதல்

     
[    
  
altவன்னியில் பல பகுதிகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் ஊடுறுவித்தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதுடன் கரும்புலித்தாக்குதல்களையும் நடத்தியுள்ளதாக படை வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
 
நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஆணையிரவின் கிழக்கே உள்ள வண்ணாண்குளம் பகுதியில் ஊடுறுவி தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் அணிகளில் இருந்த பெண் கரும்புலி ஒருவர் இந்த கரும்புலித்தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன்போது கரும்புலி பெண் சிங்கள படையின் 55ஆவது படைப்பிரிவின் மீதே தாக்குதல் நடத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
 
இந்த மோதலின்போது படையினருக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளதோடு மோதல் தொடர்ந்து இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ளது.

 
இந்த தாக்குதலில் ஊடுறுவியுள்ள விடுதலைப்புலிகளின் அணிகள் வெற்றிலைக்கேணியின் பல பகுதிகளிலும் தாக்குதலில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேபோன்று சாலைப்பகுதியிலும் விடுதலைப்புலிகளின் அணிகள் ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.swissmurasam.net/2008-10-17-05-11-45/12642-2009-03-04-11-37-43.html

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails