Tuesday, March 3, 2009

மட்டக்களப்பில் விடுதலைப்புலிகள் நடத்திய கிளைமோர் குண்டு தாக்குதல்

மட்டக்களப்பு கூழாவடியில் கிளைமோர் குண்டு தாக்குதல்: 2 அதிரடிப்படை வீரர் பலி; 2 படையினர் காயம்
 
மட்டக்களப்பு மண்டூர் கூழாவடி பிள்ளையார் கோயிலடி பகுதியில் இன்று காலை 8 மணியளவில்  இடம்பெற்ற கிளைமோர் குண்டு  தாக்குதல் சம்பவத்தில் இரண்டு விசேட அதிரடிப் படைவீரர் கொல்லப்பட்டனர். ஒரு இராணுவ வீரரும் ஒரு பொலிஸாரும் காயமடைந்துள்ளனர்.என மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
 
காயமடைந்த இரண்டு வீரர்களும்  களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அம்பாறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இக் கிளைமோர் தாக்குதல்  விசேட அதிரடிப்படையினரும், இராணுவமும் பொலிஸாரும் இணைந்து குறித்த பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டபோதே விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails