Wednesday, April 15, 2009

பெண்கள்மீது தகாத சேட்டைகள் செய்யும் தமிழ் இளைஞர்கள்

கலாச்சாரசீரழிவில் தமிழ் இளைஞரை இட்டுச்செல்லும் மட்டக்கிளப்பு அதிரடிப்படையினர்
 

மட்டக்களப்பு அம்பிளாந்துறை விசேட அதிரடிப்படையினர் அப்பிரதேசத்திலுள்ள தமிழ் இளைஞர்களை பிடித்து அச்சுறுத்தி புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருவதுடன் மக்கள் பாதுகாப்பு அமைப்பு என்ற பெயரில் அப்பிரதேசங்களிலுள்ள மக்களை தமக்கு பாதுகாப்பு கேடயமாக வைத்து எடுபிடி வேலைகளை செய்வித்தும் வருகின்றனர். அத்துடன் அம்பிளாந்துறையடி மற்றும் அதிரடிப்படை முகாமின் சுற்றுப்புறங்களில் எடுபிடிவேலைகளிலும் ஈடுபடுத்தி வருகின்றனர்.

அம்பிளாந்துறை, குருக்கள் மடம் மற்றும் புதுக்குடியிருப்பு விசேட அதிரடிப்படையினரின் அற்ப சலுகைகளுக்காக இவர்களுடன் இணைந்து செயற்படும் இப்பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 15 இளைஞர்கள் கலாச்சார சீரழிவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும், அப்பிரதேச பெண்கள் சிலரை அதிரடிப்படையினரின் இச்சைக்காக ஈடுபடுத்தியும் வருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்துடன் அப்பாவி இளைஞர்களைக் காட்டிக்கொடுத்தும், வீதியால் போய்வருகின்ற பெண்கள்மீது இவர்கள் தகாத சேட்டைகள் புரிந்தும், படையினரின் ஆதரவுடன் இரவு வேளைகளில் களவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாலும் இப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழவேண்டியிருப்பதாகவும், மீறி யாராவது இவர்களை எதிர்த்தால் மறுநள் அவர் காணாமல் போவதாகவும் அப்பிரதேச மக்கள் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளனர்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails