Thursday, April 30, 2009

இலங்கை: 350 ராணுவத்தினர் பலி: புலிகள் அதிரடி

 

இலங்கை முள்ளிவாய்க்கால் வடக்குப் பகுதியில் இலங்கை ராணுவத்தினர் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப்புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்கதல்களில் குறைந்த பட்சம் 350 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 700க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் விடுதலைப்புலிகளின் வானொலியான புலிகளின் குரல் வானொலி அறிவித்துள்ளதாக தமிழ்நெட் இணையதளத்தில் கூறப்பட்டள்ளது.

இதேபோல் வியாழக்கிழமை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதல் முயற்சி ஒன்றும் கடற்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் நிமிடம் ஒன்றுக்கு 10 எறிகணைகள் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது வீழ்ந்து வெடிக்கின்றன எனறும், முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதுள்ளதாகத் தெரிய வருகிறது.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails