Wednesday, April 29, 2009

இராணுவத்தின் 2 டோரா படகு தாக்கியழிப்பு -கரும் புலிகள் தாக்குதல்

கரும் புலிகள் தாக்குதல் இராணுவத்தின் 2 டோரா படகு தாக்கியழிப்பு (2 ம் இணைப்பு)
 

2 ம் இணைப்பு

புதிய தரையிறக்க முயற்சிக்காக 70 டோராப்படகுகள் பாதுகாப்பளிக்க இராணுவ துருப்புக்காவி படகுகள் முள்ளி வாய்கால் நோக்கி வந்துகொண்டிருந்த வேளை, இந்த பாரிய தொடரணி மீது கரும் புலிகளின் படகு மோதி தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று அதிகாலை நடைபெற்ற இத்தாக்குதலில் இராணுவத்தின் 2 அதிவேக டோராப்படகுகள் தாக்கியழிக்கப்பட்டதாகவும் மற்றும் பல டோராப் படகுகள் சேதத்திற்கு உள்ளானதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் பாதுகாப்பு அமைச்சும் கடலில் கடும் சமர் இடம்பெற்றதை உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் தமது சேதவிபரங்களை அது வெளியிடவில்லை.

 

முன்னைய செய்தி

70 டோரா அதிவேக தாக்குதல் படகுகள் சகிதம் புறப்பட்டு வந்த பாரிய தொடரணி மீது விடுதலைப் புலிகளின் கரும் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இராணுவத்தினரின் 2 டோராப்படகுகள் தாக்கியழிக்கப்பட்டதுடன் மேலும் பல டோராப் படகுகள் சேதமடைந்ததாக புலிகளின் முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத் தளம் தெரிவித்துள்ளது. மேலதிக செய்திகளை பெற நாம் தொடர்புகளை மேற்கொண்ட்டிருக்கிறோம்

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails